நமது கவிப் பேரரசு நண்பர் வைரமுத்து அவர்களுக்கு நாளை கோவையில் பிறந்த நாள் பெருவிழா! (13.7.2022)
இலக்கியத் துறையில் இவரது அரை நூற்றாண்டு சாதனை, ஓர் இமாலயச் சாதனை சரித்திரம்!
'திராவிடம்' மட்டுமல்ல; அனைத்துலகமுமே மகிழ்ந்து பெருமைப்பட வேண்டிய மானுடத்தின் மகத்தான சாதனையே 38 நூல்கள், 7510 பாடல்கள் முதலியன.
பல விருதுகள்; பல்கலைக் கழகங்களின் பல மதிப்புறு முனைவர் பட்டங்கள் - வியக்கத்தவை!
'எம்மவர் அவர்' என்ற பெருமிதத்தால் பூரிப்படைகிறோம் பகுத்தறிவாளர்களான பெரியார் தொண்டர்கள்!
ஒரு சிறு கிராமத்தில் - வடுகபட்டியில் பிறந்து, உலகளாவிய புகழ் மகுடத்திற்கான உரிமையாளராக உயர்ந்துள்ள அவரது குன்றா உழைப்பு நம் இளைஞர்களும், கலைஞர்களும் கற்றுத் தெளிய வேண்டிய அரிய பாடம்!
பாடம் கற்பீர் இளைஞர்களே,
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!
இணையற்ற கவிப் பேரரசே!
அரசுகளுக்கு எல்லை உண்டு -
எங்கள் கவிப்பேரரசுக்கு எல்லை ஏது?
வாழ்க! வாழ்கவே!! வளர்க!!!
No comments:
Post a Comment