Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது: மம்தா திட்டவட்டம்
July 29, 2022 • Viduthalai

கொல்கத்தா, ஜூலை 29- 2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் மூத்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிமீது ஆசிரியர்கள் பணியி டங்களில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. அவருக்கு நெருக்க மானவர்களின் இடங்களில் நடத் திய சோதனைகளில் பார்த்தா சாட் டர்ஜியின் உதவியாளர் வீட்டிலி ருந்து பெட்டி பெட்டியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பெட்டிகளில் சுமார் ரூ.20 கோடி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டு உள்ளார். 

பார்த்தா சாட்டர்ஜியால் மம்தா அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகா ரத்தை பாஜக கையில் எடுத்து திரிணாமூல் காங்கிரஸ் மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகிறது. இந்நிலையில் மம்தா கொல்கத் தாவில் 27.7.2022 அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், “திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீய நோக்கத்துடன் பிரச் சாரங்கள் செய்யப்படுகின்றன. ஒரு வர் குற்றம் செய்ததாக நிரூபிக்கப் பட்டால் நீதிமன்றம் அவரைக் கண் டிப்பாக தண்டிக்கட்டும். ஆனால், புலனாய்வு அமைப்புகள் அரசியல் கட்சிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத் தும் நோக்கில் பயன்படுத்தப்படக் கூடாது. நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தை நடத்துகிறீர்கள்.

 அதில், சில தவறுகள் நடக்கலாம். யாராவது ஏதாவது ஒரு தவறை செய்துவிட்டால் அது சட்டப்படி நிரூபிக்கப்பட்டால், அவர்கள் கண் டிப்பாகத் தண்டிக்கப்பட வேண் டும். அந்த விஷயத்தை வைத்து தீய நோக்கத்துடன் பிரச்சாரம் செய் வதைத்தான் நான் எதிர்க்கிறேன். மத்தியில் உள்ள ஆளுங்கட்சியான பாஜகவால் எதிர்க்கட்சி தலைவர் களும் தொழிலதிபர்களும் விசா ரணை அமைப்புகளால் அச்சுறுத் தப்படுகிறார்கள். விசாரணை அமைப்புகள் எந்தச் சார்பும் இல் லாமல் நடந்து கொண்டால் எனக்கு அதில் பிரச்சினை கிடையாது. நாடாளுமன்றத்தில் இதையெல் லாம் எதிர்த்து கேள்வி எழுப்பினால், இடைநீக்கம் செய்து விடுகிறார்கள். 2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும். நான் எண்ணிக்கையைப் பற்றியும் கூற முடியும். அதனால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உறுதி யாக சொல்வேன்” என்று மம்தா தெரிவித்தார்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image
நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
January 23, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn