சென்னை, ஜூலை 7 பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை 6 மாதங்களாக குறைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு தடுப்பூசி மய்யங்களில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப அறிவுரை குழு பரிந்துரையின்படி பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கால அவகாசம் 9 மாதங்களில் இருந்து 6 மாதங்கள் குறைக்கப்படுகிறது. எனவே, 6 மாதங்கள் நிறைவடைந்த 18 முதல் 59 வயது வரை உள்ள அனைவரும் தனியார் மய்யங்களிலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசு மய்யங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Thursday, July 7, 2022
பூஸ்டர் தடுப்பூசி - முக்கிய அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment