சென்னை, ஜூலை 15 முதுநிலை படிப்புகளுக்கான ஒன்றிய பல்கலை. நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டுமுதல் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு பல்கலை. பொது நுழைவுத்தேர்வு cuet.nta.nic.in கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு முதுநிலை படிப்புக்கான சியுஇடி தேர்வு ஜூலைஇறுதியில் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) மூலம் கணினிவழியில் நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த மே 19இல் தொடங்கி ஜூலை முதல் வாரத்தில் நிறைவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீuமீt.ஸீtணீ.ஸீவீநீ.வீஸீ என்ற இணையதளம் வழியாக பட்டதாரிகள் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஜூலை 19ஆம் தேதி வரை செலுத்தலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment