கழக வட சென்னை மாவட்ட இளைஞரணி சார்பாக நேற்று (03.07.2022) மாலை 7 மணி முதல் 8.30மணி வரை மாலை நேர அங்காடி பகுதியில், ஜூலை 30 அன்று அரியலூரில் நடைபெற விருக்கும் கழக மாநில மாநாட்டினை முன்னிட்டு கடை வீதிப் பிரச்சாரத்தினை வட சென்னை இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன் தலைமையில் பகுத்தறிவாளர் கழக மாநில செயலாளர் ஆ.வெங்கடேசன் தொடங்கி வைத்தார். கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், வட சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சா.சாம்குமார், வட சென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்
சு.அரவிந்த குமார், சென்னை மணடல திராவிட மாணவர் கழக செயலாளர் சு. தமிழ்ச்செல்வன், வட சென்னை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பா.பார்த்தீபன், புதுக் கோட்டை அன்பரசன், திண்டிவனம் சுர்ஜித் ஆகியோர் கடை வீதிப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment