சிறுபான்மையினருக்கு துரோகம்! ஆண்டுக்கு ரூ..3 ஆயிரம் மட்டும் நிதி ஒதுக்கிய ஒன்றிய பிஜேபி அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

சிறுபான்மையினருக்கு துரோகம்! ஆண்டுக்கு ரூ..3 ஆயிரம் மட்டும் நிதி ஒதுக்கிய ஒன்றிய பிஜேபி அரசு

மதுரை, ஜூலை 20 ஒன்றிய அரசு கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுக்கு வெறும் ரூ.12 ஆயிரம் மட்டுமே சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதிஒதுக்கீடு செய்துள்ளது.

இதே நிலையில் தமிழ்நாட்டுக்கு கடந்த 2011-2012 முதல் 2015-2016 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.172 கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தி ஃபேக்ட் (The Fact) அமைப்பின் சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற தகவல்களை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஒன்றிய அரசு ஆண்டுதோறும் மாநில சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதி ஒதுக்கி வருகிறது. கடந்த 2011-2012 முதல் 2015-2016 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.172,43,10,000 (நூற்று எழுபத்தி இரண்டு கோடியே 43 லட்சம் வரை) தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதி ஒதுக்கி உள்ளது. கடைசி 4 ஆண்டுகளில் கடந்த 2018-2019 முதல் 2021-22 வரையில் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு வெறும் ரூ.12 ஆயிரம் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளனர்.

இது கடந்த 2016-2017ஆம் ஆண்டு மற்றும் 2017-2018ஆம் ஆண்டு ஆகிய நிதியாண்டுகளில் வெறும் 0 (பூஜ்ஜியம்) நிதி ஒதுக்கீடு என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ஒன்றிய அரசு சிறுபான்மையினருக்கான நலத்திட்ட நிதி ஒதுக்கீட்டை படிப்படியாக குறைத்து வருவது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு நிதி ஒதுக்கீடுகளை தவிர்ப்பதால் மாநிலத்தில் பல ஆண்டுகளாக சிறுபான்மையினர் மக்களுக்காக பிரத்யேகமாக வழக்கத்தில் இருந்து வந்த கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு பணிகள் பாதியிலேயே முடங்கியுள்ளது.

ஒன்றிய அரசு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி வரை நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர், ஒன்றிய அரசிற்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதி சிறப்பு கவனம் பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

No comments:

Post a Comment