செப்.1 முதல் குறுவை நெல் கொள்முதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

செப்.1 முதல் குறுவை நெல் கொள்முதல்

தஞ்சாவூர்,ஜூலை22- டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதலை செப்டம்பர் 1-ஆம் தேதியே தொடங்குவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங் கியுள்ளது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழ் நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக் கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங் களில் வழக்கமாக குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது . குறுவை நெல் அறுவடை செய்தால் அதை வழக்கமாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் தான் புதிய விலைக்கு கொள் முதல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக் கப்பட்டுள்ளதால் சாகுபடி பணியை முன்கூட்டியே விவசாயிகள் தொடங்கியுள்ளதால் கொள்முதலையும் முன் கூட்டியே செப்டம்பர் 1ஆம் தேதி திறக்க வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச் சரும், பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக செப்டம்பர் 1-ஆம் தேதி கொள்முதல் தொடங்க வேண் டும் என வலியுறுத்தி இருந்தார். இதற்கு தற்போது ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கர பாணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தமிழ்நாட்டு வரலாற்றில் என்று மில்லாத அளவிற்கு மே மாதம் 24 ஆம் நாளன்றே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிட்டார்.

தண்ணீர் திறந்துவிட்ட தோடு  நில்லாமல் குறுவை நெல் சாகுபடியும் அறுவடையும் முன்பாகவே தொடங்கிவிடும் என்பதால் 2022-2023 ஆம் ஆண்டு காரிஃப் சந்தைப் பருவக் கொள்முதலை 1.10.2022 அன்று தொடங்குவதற்குப் பதிலாக 1.9.2022 அன்றே ஆரம்பித்தி டவும் அப்படிக் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு 2022 --2023 ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை வழங் கிட வேண்டும் என்றும் வேண்டு கோள் விடுத்து இந்தியப் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் 21.06.2022 அன்று கடிதம் எழுதினார்.

மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கினங்க, ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச் சர் பியுஸ் கோயலை நானும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை யின் முதன்மைச் செயலாளரும் கோயம்புத்துரில் 25.06.2022 அன்று நேரில் சந்தித்து முதல மைச்சர், பிரதமருக்கு எழுதிய கடித நகலைக் கொடுத்து 1.09.2022 அன்று நெல் கொள் முதலைத் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

புதுடில்லியில் 5.07.2022 நடந்த மாநில உணவு அமைச் சர்கள் மாநாட்டின் போதும் ஒன்றிய அமைச்சரிடம் இது பற்றி நானும், துறையின் முதன் மைச் செயலரும் நினைவூட் டினோம்.மேலும், குறு வைப் பருவ நெல் கொள்முதல் தொடர்பாக காவிரிப்பாசன மாவட்ட விவசாயிகளின் ஆலோ சனைகளைக் கேட்டிட வும் நெல் கொள்முதலுக்கான ஆயத்தப்பணி களை உடனே மேற்கொண்டிடவும் முதல மைச்சர் ஆணையிட்டார்.

அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடு துறை மற்றும் நாகப்பட்டினம் மாவட் டங்களில் 12.07.2022 மற்றும் 13.07.2022 ஆகிய இரு நாள்களில் மக்கள் பிரதிநிதிகளையும் விவசாயிகள் பிரதிநிதிகளையும் சந்தித்து ஆலோ சித்ததோடு தொடர் புடைய அலுவலர்களின் ஆய்வுக் கூட் டங்களையும் நடத் தினோம்.

நெல் கொள்முதலுக்குத் தேவை யான பணியாளர்கள் தேர்வு, கொள் முதல் நிலை யங்கள் மற்றும் நெல் அதன டிப்படையில் சேமிப்புக்கான இடங்கள், கொள்முதலுக்குத் தேவையான சாக்குகள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப் பட்டன. 

2022- - 2023 ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தை ஒரு மாதம் முன்னதாக 1.09.2022 அன்றே தொடங்கி நெல் கொள் முதல் செய்ய அனுமதி வழங்கிய ஒன்றிய அரசின் கடிதம் (19.07.2022 அன்று கிடைக்கப் பெற்றது. 

இதனால் 1.09.2022 அன்றி லிருந்தே நெல் கொள் முதல் செய்வ தற்கான பணி களைத் தொடங்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

1.09.2022 அன்றே 2022- 2023 ஆம் ஆண்டு பருவ நெல் கொள் முதலைத் தொடங்க பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்ச ருக்கும் அனுமதி வழங்கிய பிரதமருக்கும் ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநி யோகத் திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

இதன்படி, கொள்முதல் செய்யப்படும் பொது ரகத்துக்கு 2,115 ரூபாயும், சன்ன ரகத்திற்கு 2,160 ரூபாயும் விவசாயிகளுக்கு கிடைக் கும் என்பதை மகிழ்ச் சியுடன் தெரிவித்துக் கொள் கிறேன்” என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள் ளனர்.

No comments:

Post a Comment