பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியாக இருந்தபோது 1993-1997ஆம் ஆண்டு பிரிவில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் இன்றைக்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) என உயர்ந்து வளர்ந்து நிற்கும் நிறுவனத்தின் பல்நோக்கு விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேந்தர் டாக்டர் கி. வீரமணி பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்வில் பெரியார் மணியம்மை முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் பேராசிரியர் கவிதா ஒருங் கிணைப்பாளர் உமாமகேஸ்வரி, மற்றும் முன்னாள் மாணவர்கள் இணந்து சந்திப்பு நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து இருந்தனர். இணையம் வழியாக வெளிநாடுகளிலிருந்து (அதிகாலை 3.30 மணி அவர்களுக்கு) உற்சாகத்தோடு பங்கேற்றனர். ஆட்சிமன்ற குழு உறுப்பினர் வீ. அன்புராஜ், துணைவேந்தர் டாக்டர் வேலுச்சாமி, பதிவாளர் சிறீவித்யா ஆகியோர் பங்கேற்றனர். இக்கல்லூரியில் படித்து பல்வேறு உயர் பொறுப்புகளில் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் மாணவர்களும் மகிழ்ச்சியோடு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அனைவரும் வேந்தருடன் குழுப் படம் எடுத்துக் கொண்டனர். மாணவர்கள் சார்பாக முன்னாள் முதல்வர்கள் கோபால்சாமி, நல். இராமச்சந்திரன் ஆகியோரின் புகைப்படங்களை வேந்தரிடம் வழங்கினர். அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. (தஞ்சை, 8.7.2022)
Saturday, July 9, 2022
Home
கழகம்
தமிழ்நாடு
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) முன்னாள் மாணவர்கள் சந்திப்பு - (1993-1997ஆம் ஆண்டில் படித்த மாணவர்கள்)
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) முன்னாள் மாணவர்கள் சந்திப்பு - (1993-1997ஆம் ஆண்டில் படித்த மாணவர்கள்)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.


No comments:
Post a Comment