சென்னை, ஜூலை 12 குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க, வரும் 17ஆம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து தலைமைக் கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க முதலமைச்சரும் தி.மு.க., தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 17ஆம் தேதி காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாயலத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். எனவே, சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment