ஆன்லைன் சூதாட்டம் - தடை செய்ய நீதிபதி தலைமையில் குழு முதலமைச்சர் அறிவித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

ஆன்லைன் சூதாட்டம் - தடை செய்ய நீதிபதி தலைமையில் குழு முதலமைச்சர் அறிவித்தார்

சென்னை, ஜூன் 11- இணைய ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம்  கொண்டு வர ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் தலைமையில் குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப் பித்துள்ளார். அதன் விவரம் வரு மாறு: இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண் ணிக்கை நாள்தோறும் பன் மடங்கு அதிகரித்து வரும் நிலை யில், இணைய ரம்மி விளை யாட்டில் ஈடுபடுவோரின் எண் ணிக்கையும் அதிகரிக்கத் தொடங் கியது. முந்தைய ஆட்சியாளர் களால் கடந்த 25-.2.-2021 அன்று 'ஆன்லைன் ரம்மி' விளையாட் டிற்கு எதிராகச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. 

இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசா ரித்த  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கடந்த 3-.8-.2021 அன்று வழங்கிய தீர்ப்பில், இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட் டுள்ளதாகத் தெரிவித்து, அதனை ரத்து செய்தது. மேலும், இச்சட் டத்தை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, அச் சட்டம் நிறைவேற்றப்படுவதற் கான அறிவியல்பூர்வமான தரவு களை விளக்கத் தவறியதாகவும் கருத்து தெரிவித்திருந்தது. 

 சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை எதிர்த்து  உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 13.-11.-2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும், கேரளா, கருநாடகா போன்ற மாநிலங்களில் 'ஆன் லைன் ரம்மி' விளையாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டின்பால் ஈர்க் கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள் ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சி யாக நடைபெற்று வருகின்றன. 

இது தொடர்பாக மேற் கொள்ளவேண்டிய நடவடிக் கைகள் குறித்து, முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில்  9-.6.-2022 அன்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில்,  இணைய ரம்மி விளையாட்டினால் ஏற் படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன் மையைக் கண்டறியவும் இவ் விளையாட்டுகளினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும்;

இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம் பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப் படுத்தவும், இரண்டு வாரங்களுக் குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  கே. சந்துரு தலைமையில், அய்அய்டி தொழில் நுட்ப வல்லு நர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேகா அமைப் பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜய குமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

மேற்குறிப்பிட்ட குழு அளிக் கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்சினைக்கு உட னடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இதன் மூலம் இச்சட்டம் பிற மாநி லங்களுக்கும் வழிகாட்டிடும் வகை யில் முன் மாதிரிச் சட்டமாக அமையும்.


No comments:

Post a Comment