தமிழ்நாட்டில் கரோனா: கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 19, 2022

தமிழ்நாட்டில் கரோனா: கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

சென்னை, ஜூன் 19 தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் கட்டுப்பாடுகள் விதிக்கும் சூழல் ஏற்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.

சென்னை மாதவரத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் 12 படுக்கைகள் கொண்ட டயாலிசிஸ் மய்யத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 17.6.2022 அன்று திறந்து வைத்தார். 

அப்போது, செய்தியாளர் களிடம் அமைச்சர் கூறியதாவது:

ரோட்டரி பவுண்டேஷன் சார் பில் டயாலிசிஸ் மய்யம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரோட்டரி பவுண்டேஷன் இதுவரை 125 டயாலிசிஸ் இயந்திரங்களை திருவொற்றியூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வந் துள்ளன. இந்த மய்யத்தில் 12 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட் டுள்ளன.

உலகம் முழுவதும் 22 நாடு களில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ளது. அந்த நாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்களை விமான நிலையங்களில் சுகாதாரத் துறை குழுவினர் கண்காணித்து வரு கின்றனர். தமிழ்நாட்டில் இது வரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட் டங்களில்தான் அதிகமாகவுள்ளது. ஆர்டிபிசிஆர் மொத்த பரி சோதனை எண்ணிக்கையில் 10 சதவீதத்துக்கும் மேல் தொற்று பாதிப்பு இருந்தாலோ, மருத்துவ மனைகளில் 40 சதவீதத்துக்கும் மேல் அனுமதி இருந்தாலோ கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அத்தகைய சூழல் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment