இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 8582 பேருக்கு கரோனா தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 13, 2022

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 8582 பேருக்கு கரோனா தொற்று

சென்னை, ஜூன் 13- இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 8,582 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 44,513பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,435 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 195.07 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில் இன்று ஆண்கள் 137, பெண்கள் 112 என மொத்தம் 249 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 124 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 57,382 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 18,025 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 148 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 1,332 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழ்நாட்டில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 217 ஆகவும், சென்னையில் 111 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment