ஜுலை 30: அரியலூர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு சீருடை அணிவகுப்பில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

ஜுலை 30: அரியலூர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு சீருடை அணிவகுப்பில்

திருவாரூர் மாவட்டத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க முடிவு

திருவாரூர், ஜூன் 12- திருவாரூர் மாவட்ட கழக  இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் திருவாரூரில் ஜூன் 5 ஆம் தேதி நடைபெற்றது.

கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட இளைஞரணிச் செய லாளர் ம.மனோஜ் வரவேற் றார். திருவாரூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் 

கோ.பிளாட்டோ தலைமை வகித்து உரையாற்றினார். மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் தொடக்க வுரையாற்றினார்.  மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார் ஆகி யோர் கருத்துரையாற்றினர்.

கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் சிறப்புரை யாற்றினார். அப்போது, சென்னை பெரியார் திடலில் ஏப்ரல் 30-ஆம் தேதி நடை பெற்ற மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை செயல்படுத்துவது குறித் தும், அரியலூரில் ஜூலை 30 அன்று நடைபெறவுள்ள மாநில இளைஞரணி மாநாடு மற்றும் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி முகாமில் இளைஞர்கள் பங்கேற்க வேண் டியதன் அவசியம் குறித்தும் உரையாற்றினார்.

திருவாரூர் மண்டல இளை ஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, திருவாரூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் 

வீ.மோகன், மாவட்டச் செயலா ளர் வீர.கோவிந்தராசு, திரா விட விவசாய தொழிலாளரணி மாநிலச் செயலாளர் க.வீரய் யன், மாவட்ட துணைத் தலை வர் எஸ்.எஸ்.எம்.கே.காந்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மண்டல மாணவர் கழகச் செயலாளர் இளமாறன், இளைஞரணித் தோழர்கள் தொல்காப்பியன், தமிழவன், அரிகரன், நர்மதா, அறிவுக்கரசு, முனைவர் இளைய அரசு, கேசவன் மனோகர், விக்னேஷ், கார்த்தி. மாநில ப.க துணைத் தலைவர் கோபு. பழனிவேல், தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர் முனைவர் வே.ராஜவேல், நன்னிலம் ஒன்றிய ப.க தலைவர் கரிகாலன், திருவாரூர் ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன், தமிழ் மணி, மனோகர், பழனிச்சாமி பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:

தீர்மானம் 1: மாநில இளை ஞரணி கலந்துரையாடல் கூட்ட தீர்மானங்கள்

30.04.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலை மையில் நடைபெற்ற கழக மாநில இளைஞரணி கலந்து ரையாடல் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 2: தமிழர் தலை வர் ஆசிரியருக்கு வாழ்த்து - நன்றி

எதிர்கால இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏப்ரல் 3 முதல் 25 வரை நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாள்கள் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு உள்ளிட்ட முழக்கங்களை முன்னிறுத்தி கோடை வெப்பம் உடல் நிலை யையும் பொருட்படுத்தாமல் பரப்புரைப் பயணம் மேற் கொண்டு மிகப்பெரிய எழுச் சியை ஏற்படுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் வாழ்த் துக்களையும், நன்றியை யும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3: திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாடு

2022 ஜூலை 30 அன்று அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில இளை ஞரணி மாநாட்டில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தனிப் பேருந்தில் சென்று, அம் மாநாட்டில் நடைபெறும் சீருடை அணிவகுப்பில் பங் கேற்பது எனவும், இம்மாநில மாநாட்டை விளக்கி மாவட் டம் முழுவதும் சுவரெழுத்து பிரச்சாரம் செய்வது மற்றும் தெருமுனை கூட்டங்களை நடத்துவது எனவும் பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சிக்கு 10 இளைஞர்களை அனுப்புவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4: 60000 விடுதலை சந்தா

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளிதழுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆசிரியராக பொறுப்பேற்று 60 ஆம் ஆண்டு தொடங்கவுள் ளது. 60 ஆண்டுகளாக அய ராது பணியாற்றிவரும் தமிழர் தலைவர் அவர்களை ஊக்கப் படுத்திடவும், இனவுரிமை மீட்பு போரில் வாளாக போரி டும் விடுதலைக்கு 60,000 சந்தா சேர்ப்பு இயக்கத்தில் கழக இளைஞரணி பொறுப்பாளர் கள், தோழர்கள் மாவட்ட கழக பொறுப்பாளர்களோடு இணைந்து பணியாற்றி இலக்கை எட்டுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5: கிராம பிரச்சாரம் :

திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றியங்கள் தோறும் கிளைக் கழக வாரியாக கலந்துரையா டல் கூட்டங்களை நடத்தி, இளைஞரணி அமைப்பை புதுப்பிப்பது எனவும், இளை ஞர்களை இயக்கத்தின்பால் ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு கிளை கழகத்திலும் கிராமபிரச் சார கூட்டங்களை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

நிகழ்ச்சியின் முடிவில் சமரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment