இந்தியாவில் 17 ஆயிரம் பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

இந்தியாவில் 17 ஆயிரம் பேருக்கு கரோனா

புதுடில்லி, ஜூன் 27 இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.  இது தொடர்பான விவரத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம்  வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்து 73 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய (26.6.2022) பாதிப்பான 11 ஆயிரத்து 739 மற்றும் நேற்று முன் தின (25.6.2022) பாதிப்பான 15 ஆயிரத்து 940-அய் விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 7 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 15 ஆயிரத்து 208 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 87 ஆயிரத்து 606 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 94 ஆயிரத்து 420 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால், இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 20 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 197 கோடியே 11 லட்சத்து 91 ஆயிரத்து 329 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment