ஜூன் 12 கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில கலந்துரையாடல் - மகளிர் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்திட திருச்சி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 5, 2022

ஜூன் 12 கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில கலந்துரையாடல் - மகளிர் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்திட திருச்சி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

திருச்சி, ஜூன் 5 03-06-2022 வெள்ளி முன்பகல் 11 மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையில் திருச்சி, லால்குடி மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரை யாடல் கூட்டம் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்  தலைமையில் நடைபெற்றது.

 ஜூன் 12 திருச்சியில் நடைபெறும் கழக மகளிரணி , மகளிர் பாசறை மாநில கலந்துரையாடல் மற்றும் பொதுக்கூட்டத்தை மிக எழுச்சி யாக நடத்திட வழிமுறைகளை குறிப்பிட்டு கழகப் பொதுச் செய லாளர் உரையாற்றினார் மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் வர வேற்று உரையாற்றினார்.

திருச்சி மாவட்டத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், மண்டல செய லாளர் ஆல்பர்ட், தொழிலாளரணி மாநில செயலாளர் மு.சேகர், மகளிரணி மண்டல செயலாளர் கிரேசி ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்

மாவட்ட மகளிரணி தலைவர் ரெஜினா, செயலாளர் சாந்தி, மாநகரத் தலைவர் துரைசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் மகாமணி, தொழில்நுட்ப அணி வி.சி.வில்வம், மாவட்ட மாணவர் கழக செயலாளர் அறிவுச்சுடர், லால்குடி ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர், முபாரக், ரூபியாஸ் டாலின், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சங்கீதா, வசந்தி, அம்மனியம்மாள், அமுதா, ராஜேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் கலத்து கொண்டு உரையாற்றி னார்.

தீர்மானம்

கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில கலந்துரையாடல் கூட்டம், மற்றும் முற்றிலும் மகளிரே பங்கேற் கும் பொதுக்கூட்டத்தை திருச்சி

யில் நடத்திட வாய்ப்பளித்த தமிழர் தலைவர் ஆசிரியருக்கு நன்றி, 

கலந் துரையாடல் மற்றும் பொதுக் கூட்டத்தை எழுச்சியுடன் 

நடத்துவது, ஜூன் 12 திருச்சிக்கு வருகை தரும் ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, ஜூன் - 7 அன்று திருவெறும்

பூரில் பெரியார் நகர்வு புத்தக சந்தையை சிறப்பாக நடத்

துவது என தீர்மானிக்கப் 

பட்டது.


No comments:

Post a Comment