கேள்வி 1 : தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக உள்ளது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்; ஆனால், சென்னையில் மின் தடை அடிக்கடி ஏற்படுகிறதே?
- க.சுகந்த், கோவில்பட்டி
பதில்:
நடுவில் நிலக்கரி பற்றாக்குறை, சில மின் உற்பத்தி
நிலையங்களில் ஏற்பட்ட தடங்கல் - சிற்சில
கோளாறுகள் காரணமாக இருக்கலாம். இதுபற்றிய
விளக்கத்தை மக்களுக்கு விளங்கும் வகையில் மின்சாரத்துறை அமைச்சர்
கூறுவார் என்று நம்புகிறோம்.
கேள்வி 2 : பஞ்சாப் மாநிலத்தில் அரசு திட்டங்களுக்கு கமிஷன் கேட்ட அமைச்சரை பதவி நீக்கம் செய்ததோடு, கைதும் செய்யப்பட்டிருக்கிறாரே?
- மு.சம்பந்தன், திருக்கழுக்குன்றம்
பதில்:
இப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் வர
வேற்கப்பட வேண்டும். உடனடி நடவடிக்கைகள்தான் ஆளுமைத்
தூய்மையை உறுதிப்படுத்தக்கூடும்
கேள்வி 3 : கரோனா கொடுந்தொற்று காலத்திற்குப் பிறகு - இரண்டு ஆண்டுகள் கழித்து - தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கோவில் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறுகிறதே, இது எதைக் காட்டுகிறது?
- எ.முருகன், சோளிங்கர்
பதில்:
கடவுள்களுக்கும், கரோனா கண்டு கதி
கலங்கி முடங்கியவர்களுக்கும் இது விடுதலை - இல்லை
- ‘பரோல்’ அல்லவா? எனவே தான்
கொண்டாடுகிறார்கள் போலும்!
கேள்வி 4: காங்கிரஸ் பேரியக்கத்தில் நீண்ட காலமாக இருந்த கபில்சிபல், அக்கட்சியிலிருந்து விலகியிருப்பது குறித்து?
- கு.குபேந்திரன், குடியாத்தம்
பதில்:
பதவிப் பசி மனிதர்களை எவ்வளவு
நன்றி மறந்தவர்களாக்கும் என்பதற்கும், எப்போதும் பதவி மூலமே அரசியல்
செய்ய வெளிச்சம் தேட விழையும் பலவீனத்திற்கும்
நல்ல எடுத்துக் காட்டான - ‘சமய சஞ்சீவிகள்!’
கேள்வி 5: அமெரிக்கா ஒரு வல்லரசாக இருந்தாலும், வன்முறை வெறியாட்டங்களை (துப்பாக்கிச் சூடு கலாச்சாரங்களை) கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறதே?
- கே.சுடலை, சேலம்
பதில்:
இது பற்றிய நமது அறிக்கையை
26.5.2022 “விடுதலை”யில் காண்க!
கேள்வி 6: ஒன்றிய அரசு பெட்ரோல் விலையைக் குறைத்துவிட்டது என்று பா.ஜ.க.வினர் தம்பட்டம் அடிப்பதுபற்றி....?
- ம.செல்வராஜ், சென்னை
பதில்:
முன்பு எத்தனையோ முறை விலையேற்றி ஒன்றிய
அரசின் கஜானாவில் எத்தனை லட்சம் கோடி,
ஏழை எளியவர்களை கசக்கிப் பிழிந்து வசூலித்து விட்டதில் ஒரு சிறு அளவு
குறைப்பு - “ஒட்டகம் சுமையிலிருந்து சிறிது
எடுத்த கதை” போல!
கேள்வி 7 : மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்ததால் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு லாபமா?
- பா.சிவக்கொழுந்து, சென்னை
பதில்:
இதுபற்றிய விரிவான அறிக்கை, காரண
காரிய விளக்கம் - ‘விடுதலை’யில் (தேதி:
25.05.2022) வெளிவந்துள்ளதே!
படிக்கவில்லையானால் தேடிப்படித்தால் முழு விடை கிடைக்கும்!
கேள்வி 8 : தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்கள்பற்றி தங்களின் கருத்து?
- கா.வேல்வேந்தன், சிதம்பரம்
பதில்:
நாட்டின் எல்லா மாநிலங்களிலிருந்தும் வசூலிக்கப்படும் நிதியினை
அளிக்கும் மாநில அரசுகள் - அந்த
மாநிலங்கள் வளர்ச்சிக்குத் தீட்டும் திட்டங்களே இவை! அவரது கடமையைச்
செய்துள்ளார்! இதில் பாரபட்சம் இன்றி
செய்தால் அவர் பணி பாராட்டப்படும்.
நமது முதல் அமைச்சர் எடுத்து
வைத்த 5 கோரிக்கைகள் எதற்கும் ‘பதில்’ அளிக்கவில்லையே - அதுதான்
நெருடலாக உள்ளது. “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் அப்போதுதானே காதினிலே உண்மையாகப் பாயும்” - இல்லையே?
கேள்வி 9: கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது; அது இப்பொழுது இல்லையே, ஏன்?
- எ.ஆனந்த், கள்ளக்குறிச்சி
பதில்: அது வருகையின் நோக்கத்தையும், சூழ்நிலையும் பொருத்தது. “எதிர்ப்பு - எதிர்க்க வேண்டுமென்பதற்கான வெற்று எதிர்ப்பாக இருக்கக் கூடாது” என்ற தத்துவ உண்மை வெளிச்சமிருக்கிறது என்றாலும், கோரிக்கைகளை அலட்சியப்படுத்தினால் - அது அமைதியான எதிர்ப்பிற்கே வழிகோலும் என்பதை எவரே மறுக்க முடியும்!
கேள்வி 10: ஒன்றிய அரசு வேலை வாய்ப்பில், தமிழ் மொழிக்கு இடமின்றி தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனரே?
- பே.பாலு, திருச்சி
பதில்: அதனை அரசுகளின் கவனத்திற்கும், உடனடி செயலுக்கும் கொண்டு செல்லவே நமது போராட்டங்கள் நடைபெற்றன.
No comments:
Post a Comment