தந்தை பெரியார் அருங்காட்சியகத்தில் பேரறிவாளனை அன்புடன் ஆரத் தழுவி வரவேற்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 31, 2022

தந்தை பெரியார் அருங்காட்சியகத்தில் பேரறிவாளனை அன்புடன் ஆரத் தழுவி வரவேற்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

 தந்தை பெரியார் அருங்காட்சியகத்தில் பேரறிவாளனை அன்புடன் ஆரத் தழுவி வரவேற்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி. உடன்:  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்,  மோகனா வீரமணி, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், ப.க. மாநிலத் துணைத் தலைவர் தரும. வீரமணி ஆகியோர் உள்ளனர். தந்தை பெரியார் நினைவிடத்தில் பேரறிவாளன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன்:  கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், அற்புதம் அம்மாள் மு.ந. மதியழகன், ஊத்தங்கரை வீரமணி மற்றும் தோழர்கள்.

"31 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மண்ணில் சுதந்திரமானவனாக ஓடித் திரிந்தேனோ, அதே பெரியார் திடலில் இத்தனைக் காலம் கழித்து கால் பதித்திருக்கிறேன். உணர்வுப்பூர்வமான மனநிலை.  ஆசிரியர் தாயகம் திரும்பியதும் அவரைச் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என்று காத்திருந்தோம். இன்று மகிழ்வாக அவரைச் சந்திக்க வாய்ப்பு அமைந்தது" என்று குறிப்பிட்டார். மேலும், ஆசிரியர் அவர்களிடம், Òஅய்யா, உங்கள் உடல்நலைனையும் பார்த்துக்கொள்ளுங்கள்Õ என்று அன்பொழுகக் கேட்டுக்கொண்டார். (சென்னை - 31.5.2022) 


No comments:

Post a Comment