இந்தியா யாருக்கேனும் சொந்தம் என்றால் அது திராவிடர்களுக்குத் தான் - ஓவைசி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

இந்தியா யாருக்கேனும் சொந்தம் என்றால் அது திராவிடர்களுக்குத் தான் - ஓவைசி

புதுடில்லி, மே 30- இந்தியா யாருக்காவது சொந்தமென்றால் அது திராவிடர்களுக்கும் , ஆதிவாசிகளுக்கும் தான் என ஓவைசி தெரிவித்துள்ளார். மும்பை, மராட்டிய மாநிலம் பாய்வாடியில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஅய்எம்அய்எம்) கட்சி தலைவரும், அய்தராபாத் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி பங்கேற்றார். 

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஓவைசி, இந்தியா எனக்கோ, தாக்கரேக்களுக்கோ, மோடி-ஷாக்களுக்கோ சொந்த மில்லை. இந்தியா யாருக்கேனும் சொந்தமென்றால் அது திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் தான். பாஜக - ஆர்எஸ்எஸ் முகலாயர்களுக்கு பின்னர் வந்தவை. ஆப்ரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்த பின்னரே இந்தியா உருவானது' என்றார்.


No comments:

Post a Comment