நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 23, 2022

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

சென்னை, மே 23- தேசிய தேர்வு முகமையால் நடத் தப்படும் தகுதித் தேர்வான பல்கலைக்கழக மானியக் குழுவின் நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம், உதவிப் பேராசிரியர் பணி கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வானது கடந்த டிசம்பர் மாதம் நடை பெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.இதனையடுத்து, டிசம்பர் 2021 மற்றும் ஜுன் 2022 ஆகிய இரு தேர்வுகளும் ஒரே நேரத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட் டிருந்தது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம், கடந்த 20ஆம் தேதியுடன் நிறைவடைந் தது. 

இந்நிலையில், தேர் வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட் டிக்க வேண்டும் என தேர்வர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக் கையை ஏற்று ஹிநிசி – ழிணிஜி தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது என் பது குறிப்பிடததக்கது.


No comments:

Post a Comment