சென்னை, மே 19 சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் நேற்று (18.5.2022) பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில் தாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்தனர்.
தொடர்ந்து பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் தனது விடுதலைக்காக அழுத்தமான வாதங்களை முன்வைத்தமைக்கும் பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பேரறிவாளன், முதலமைச்சருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
அவருக்கு நன்றி தெரிவித்தேன். நான் இப்போது சுதந்திர காற்றை சுவாசிக்க போகிறேன். எனது எதிர்காலம் குறித்து எந்த உதவியையும் கேட்கவில்லை.
எனது விடுதலைக்கு குறித்து முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். எனது குடும்பத்தின் சூழ்நிலை குறித்து அவர் கேட்டறிந்தார்.
மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment