தமிழ்நாட்டில் 43 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 23, 2022

தமிழ்நாட்டில் 43 பேருக்கு கரோனா

சென்னை, மே 23- மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று (22,5,2022) வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் நேற்று 13,682 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 43 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 328 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும் பினர். தமிழ்நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டு குணமடைந் தோரின் மொத்த எண்ணிக்கை 34,16,537 ஆக உயர்ந்துள் ளது. மேலும், நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை தமிழ்நாட்டில் கரோனா வுக்கு 38,025 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும், நேற்று அதிகபட்சமாக சென்னையில் 23 பேருக்கும், செங்கல்பட்டில் 9 பேருக்கும், கோவையில் 5 பேருக்கும், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், ராணி பேட்டை, திருவள்ளூர், திருப்பூரில் தலா ஒருவர் என கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மற்ற 29 மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment