புதுடில்லி, மே 19 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்சநீதி மன்றம் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-அய் பயன்படுத்தி விடுதலை செய்து நேற்று (18.5.2022) உத்தரவிட்டது.
அதாவது, 161ஆவது சட்ட பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால், உச்சநீதிமன்றமே முடி வெடுக்க வழி வகுக் கிறது சட்டப்பிரிவு 142 ஆகும். இந்நிலையில் பேரறிவாளன் வழக்கு தொடர்பான 29 பக்க தீர்ப்பு நகல் உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளி யிடப்பட்டு உள்ளது. நேற்று (18.5.2022) காலை உச்சநீதி மன்றம் நீதிபதி தீர்ப்பு வழங்கிய நிலையில், தற்போது பேரறிவாளன் விடுதலை குறித்து எழுத்துப்பூர்வமான தீர்ப்பு வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றம் நீதிபதி நாகேஸ்வர ராவ் , பி.ஆர். கவாய், ஏ.எஸ். கோபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வின் தீர்ப்பின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பேரறிவாளன் உடைய நீண்ட நாள் சிறைவாசம், சிறை மற்றும் பரோலில் நன்னடத்தை, அவருக்கு இருக்கக்கூடிய நீண்ட நாள் நோய், அவர் பெற்ற கல்வித் தகுதிகள், ஆளுநரின் இரண்டரை ஆண்டு தாமதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரமான 142அய் பயன்படுத்தி விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததை ஏற்க முடியாது. மேலும் தற்போதைய நிலையில் இத்தனை ஆண்டுகள் பேரறிவாளன் சிறையில் இருந்ததை முழு மையான தண்டனை அனுபவித்ததாக கருதி தற்போது பிணையில் உள்ள பேரறிவாளனை விடுவித்து உத்தர விடுகிறோம்" என்றும் அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment