1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை சுகாதாரத்துறை செயலாளர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை சுகாதாரத்துறை செயலாளர்

ஊட்டி, மே 16- ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மணை கட்டுமான பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தொற்று மற்றும் தொற்றா நோய்கள் கட்டுப்படுத்துவதற்கு போர்க் கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வரு கிறார்கள். கரோனா நோய் தொற்று தற்போது 100-க்கு கீழாக உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 10.22 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள். இதில் 60 வயதிற்கு மேற் பட்டவர்கள், முன்களப்பணியாளர்கள், மருத்துவப்பணியா ளர்கள் ஆகியோர் 50 சதவீதம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 93.51 சதவிகிதம் தடுப் பூசி செலுத்தி கொண்டார்கள். 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. கரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மிகப் பெரிய ஆயுதமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment