முதலமைச்சர் குறித்து அவதூறு பேசிய பா.ஜ.க. நிர்வாகி கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

முதலமைச்சர் குறித்து அவதூறு பேசிய பா.ஜ.க. நிர்வாகி கைது

கன்னியாகுமரி, ஏப்.9- பா.ஜ.க. நிறுவன தினத்தை முன்னிட்டு ஆரல்வாய்மொழியில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பா.ஜ.க. பிரச்சாரப் பிரிவு தலைவர் ஜெயபிரகாஷ் பேசும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக, காட்சிப்பதிவு ஆதாரத்துடன் திமுக மாவட்டப் பொருளாளர் கேட்சன் காவல்துறையில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி ஜெயபிரகாஷ் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இரணியலில் உள்ள ஜெயபிரகாஷின் வீட்டுக்கு  சென்று, அவரைக் கைது செய்ய  முயன்றனர். இத்தகவல் அறிந்ததும் பா.ஜ.க. மாவட்ட மேனாள் துணைத் தலைவர் ரமேஷ், கட்சித் தொண்டர்கள் அங்கு திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். 

பின்னர், ஜெயபிரகாஷை கைது செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையம் கொண்டு சென்றபோது அங்கும் பாஜகவினர் திரண்டு எதிர்ப்பு முழக்கமிட்டனர்.

No comments:

Post a Comment