Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
தமிழ்நாட்டில் நில எடுப்பு பணிக்காக 5 சிறப்பு டி.ஆர்.ஓ.க்கள் நியமனம் சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
April 09, 2022 • Viduthalai

சென்னை, ஏப்.9-  தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாலம், சாலை திட்டங்களுக்கு நிலம் எடுப்பதற்கு 5 சிறப்பு கோட்டாட்சியர்கள், 144 வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, திருமங்கலம் தொகுதி உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, ‘திருமங்கலத்தில் ரயில்வே மேம்பால பணிகளுக்கு நிலம் எடுக்க நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகளை விரைவு படுத்த வேண்டும்’ என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: ரயில்வே பாலங்களை பொறுத்தவரை நில எடுப்பு பிரச்சினை பெரிய அளவில் உள்ளது. நில எடுப்புக்கு வருவாய்த் துறையின் கோட்டாட்சியர்களை நம்பியுள்ளோம். அவர்களுக்கு வருவாய்த் துறை பணிகள் அதிகளவில் உள்ளதால், உரிய நேரத்தில் நிலஎடுப்பு பணிகளை செய்ய வருவதில்லை.

இதனால், நிலம் எடுப்பில் காலதாமதம் ஏற்பட்டு, நிலத்தின் மதிப்பு உயர்கிறது. இதனால் திட்டச்செலவு அதிகரித்து, நிதிச்சுமையும் ஏற்படுகிறது. இவை குறித்து, முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, நில எடுப்பு பணிக்காக 5 சிறப்பு வருவாய் கோட்டாட்சியர்கள், 144 வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிலம் எடுக்க வேண்டிய இடங்களில் அப்பணிகளை மட்டும் மேற்கொண்டு நிலம் எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் ரயில்வே தண்டவாளங்களின் மேல் இரு புறமும் அணுகுசாலைகளை மாநில அரசு அமைத்தாலும், தண்டவாளங்களின் மேல் உள்ள பாலப்பகுதியை ரயில்வே நிர்வாகம்தான் மேற்கொள்ளும். இதனாலும், காலதாமதங்கள் ஏற்படுகின்றன. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

ரயில்வே பாலங்களை பொறுத்தவரை நில எடுப்பு பிரச்சினை பெரிய அளவில் உள்ளது என்று கூறினார்.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn