குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய
தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு -
மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர்
அவர்கள் மேற்கொண்டுள்ள நாகர்கோயில் முதல் சென்னை வரை 21 நாள்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 15-04-2022 அன்று மாலை 6.00 மணியளவில் சுவாமிமலை கடைவீதியில் நடைபெற்றது.
கழக பேச்சாளர் பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். மாவட்ட, ஒன்றிய கழக தோழர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.
குடந்தை ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொண்டுள்ள நாகர்கோயில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 16-04-2022 அன்று மாலை 6.00 மணியளவில் பட்டீசுவரம் கடை வீதியில் நடைபெற்றது.
கழக பேச்சாளர் முனைவர்
அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட, ஒன்றிய கழக தோழர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.


No comments:
Post a Comment