ராகுல்காந்தி குற்றச்சாட்டு
அமேதி, பிப்.27 வேலை கொடுக் காத பெரும் பணக்காரர்களுக் காக மட்டுமே பிரதமர் மோடி பணி யாற்றுகிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-
உத்தரப் பிரதேசத்தில் காங் கிரஸ் அல்லாத அரசுகள், மாநி லத்தை பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலைக்கு கொண்டு சென்றதாகவும், மக்கள் தொழி லாளர்களாக மற்ற மாநிலங் களுக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் விமர் சித்தார்.
மக்கள் தங்கள் சொந்த நல னுக்காகவும் குழந்தைகளின் எதிர் காலத்திற்காகவும் வாக் களிக்க வேண்டும், ஜாதி மற்றும் மதத்தின் உணர்வுப்பூர்வ பிரச் சினைகளுக் காக வாக்களிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண் டார். பிரதமர் மோடி வேலை கொடுக்காத பெரும் பணக்காரர் களுக்காக மட்டுமே பணியாற்று வதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
உத்தரப்பிரதேச மாநிலத் திற்கு எந்த குறையும் இல்லை. வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை பின்னுக்கு தள்ளலாம். பஞ்சாப், மகாராட்டிரா மற்றும் பிற மாநிலங்களுக்கு வாழ்வாதாரம் தேடி கூலி வேலை செய்யச் செல்கிறீர்கள். நீங்கள் ஏன் இங்கே வேலைவாய்ப்பை பெற முடிய வில்லை?
பல ஆண்டுகளாக நீங்கள் சமாஜ்வாடி, பாஜக மற்றும் பகு ஜன் சமாஜ் கட்சியை தேர்ந்தெ டுத்ததுதான் இதற்கு காரணம். இந்த கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக தவறான வாக்குறுதி களை அளித்து உங்களிட மிருந்து பணத்தை கொள்ளை யடித்தன. பெரிய தொழிலதிபர் களுக்கு மட்டுமே பிரதமர் மோடி உதவி செய்கிறார். அந்த பெரும் பணக்காரர்கள் இங் குள்ள மக்களுக்கு வேலை தருவதில்லை என ராகுல் காந்தி பேசினார்.
மக்கள் பிற மாநிலங்களுக்கு குடிபெயர்வதற்கு காங்கிரசே காரணம் என குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல் காந்தி இவ்வாறு பேசினார்.
No comments:
Post a Comment