அரியானாவில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்..! மாநில அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 17, 2022

அரியானாவில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்..! மாநில அரசு அறிவிப்பு

சண்டிகர், பிப்.17 அரியானாவில் அனைத்து கரோனா கட்டுப் பாடுகளும் நீக்கப்படுவதாக அம் மாநில அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் தொடர்ந்து கரோனா பரவல் குறைந்து வருவ தால், கூடுதல் கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி அனைத்து மாநி லங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய சுகா தாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் எழுதிய கடிதத்தில், கடந்த ஜன.,21 முதல் கரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த வாரம் 50 ஆயிரமாக பதிவான கரோனா தொற்று, நேற்றைய நிலவரப்படி (பிப்.,15) 27 ஆயிர மாக குறைந்துள்ளது. தொற்று உறுதியாகும் விகிதமும் 3.56 சதவீதமாக குறைந்தது.

இந்த சூழ்நிலையில், மாநில அரசுகள் விதித்துள்ள கூடுதல் கட்டுப்பாடுகள் மக்களின் நட மாட்டம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்கக் கூடாது. அதேநேரத்தில் தொற்று உறுதியாகும் விகிதத்தை மாநி லங்கள் மற்றும் யூனியன் பிரதே சங்கள் தொடர்ந்து கண்காணிப் பதுடன், சோதனை, தொற்று உறுதியானவர்களை கண்டுபிடித் தல், சிகிச்சை, தடுப்பூசி மற்றும் பரவலை கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண் டும் என்று அதில் தெரிவிக்கப்பட் டிருந்தது.

இந்நிலையில் அரியானாவில் அனைத்து கரோனா கட்டுப்பாடு களும் நீக்கம் செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள் ளது. இதன்படி அரியானா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று அதன் திருத் தப்பட்ட வழிகாட்டுதல்களில், முன்பு வெளியிடப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், சமூக விலகல் உட்பட கரோனா பொருத்தமான நடத்தை விதி முறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment