சிதம்பரம், பிப். 15- சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருபவர் களை சிற்றம்பல மேடையில் (கனக சபை) ஏறி வழிபட அனுமதிப்பது வழக்கம். கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த நடை முறைக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி பழைய முறையி லேயே சிற்றம்பல மேடையில் (கனகசபை) ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கு பல்வேறு ஆன்மிக அமைப்புகளும் ஆதரவு தெரிவித் துள்ளனர். கடந்த 10ஆ-ம் தேதி கோயிலில் நடந்த பொதுதீட்சிதர் கள் கூட்டத் தில் இதுகுறித்து பேசப்பட்டது. அப்போது சக்தி கணேஷ் தீட்சிதர் (57) உள்ளிட்ட சில தீட்சிதர்கள் பக்தர்களை பழைய படியே சிற்றம்பல மேடையில் (கனகசபை) ஏறி வழிபட அனும திக்கலாம் என்று கூறினர்.
இதற்கு மற்ற தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கணேஷ் தீட்சிதர் 13.2.2022 அன்று இரவு சிற்றம்பல மேடையில் (கனகசபை) ஏற சென்றார். அப்போது சிலர் அவரை தாக்கி, தள்ளிவிட்டுள் ளனர்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் ராஜாசெல்வம் தீட்சிதர். சிவசெல்வம் தீட்சிதர், சபேச தீட்சிதர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் பழைய புவனகிரி சாலை பகுதியைச் சேர்ந்த ஜெய சீலா(37) என்பவர் சிற்றம்பல மேடைக்கு(கனகசபை) செல்ல முன்றார். அப்போது தீட்சிதர்கள் சிலர் அவரை தடுத்து திட்டி அனுப்பி யுள்ளார்.
இதுகுறித்து ஜெயசீலா சிதம் பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment