தமிழ்நாட்டில் புதிதாக 19,280 பேருக்கு கரோனா தொற்று: உயிரிழப்பு 20 ஆக குறைந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 19,280 பேருக்கு கரோனா தொற்று: உயிரிழப்பு 20 ஆக குறைந்தது

 


சென்னை, பிப்.1 தமிழ்நாட்டில் நேற்று 19 ஆயிரத்து 280 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது.

தமிழ்நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு குறித்து மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நேற்று (31.1.2022) புதிதாக 1 லட்சத்து 22 ஆயிரத்து 105 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 11 ஆயிரத்து 481 ஆண்கள், 7 ஆயிரத்து 799 பெண்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 280 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 897 பேரும், கோவையில் 2 ஆயிரத்து 456 பேரும், செங்கல்பட்டில் ஆயிரத்து 430 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக வேலூரில் 72 பேரும், பெரம்பலூரில் 40 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் நேற்று வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேர் உட்பட 12 வயதுக்கு உட்பட்ட 458 குழந்தை களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 2 ஆயிரத்து 989 பேருக் கும் தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 33 லட்சத்து 45 ஆயிரத்து 220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 24 ஆயிரத்து 105 குழந்தை களும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 87 ஆயிரத்து 580 முதிய வர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்றைய நில வரப்படி 8 ஆயிரத்து 52 பேர் மருத் துவமனைகளில் கரோனா வுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 ஆயிரத்து 726 பேர் ஆக்சி ஜன் வசதி படுக்கை கொண்ட வார்டுகளிலும், ஆயிரத்து 30 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

20 பேர் உயிரிழப்பு

கரோனாவுக்கு தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 13 பேரும், தனியார் மருத்துவமனை களில் 7 பேரும் என 20 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள் ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 6 பேரும், கோவையில் 3 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சியில் தலா இருவரும், நாகப் பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணா மலை, திருவாரூர், தூத்துக்குடியில் தலா ஒருவரும் என 10 மாவட்டங் களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 564 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 25 ஆயிரத்து 56 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்செய்யப் பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 5 ஆயிரத்து 75 பேரும், கோவையில் 3 ஆயிரத்து 284 பேரும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 218 பேரும் அடங்குவர். இதுவரையில் 31 லட்சத்து 9 ஆயிரத்து 526 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழ் நாட்டில் கரோனா பாதித்த 1 லட்சத்து 98 ஆயிரத்து 130 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment