10, 12ஆம் வகுப்பு வினாத்தாள் நடைமுறையில் மாற்றம்; தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடத்துக்கு முன் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 16, 2022

10, 12ஆம் வகுப்பு வினாத்தாள் நடைமுறையில் மாற்றம்; தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடத்துக்கு முன் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்

சென்னை, பிப்.16 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன் கூட்டியே வெளியான நிலையில், வினாத்தாள் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வினாத்தாளை தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புமாணவர்களுக்கான முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. பொதுத் தேர்வு எவ்வாறு நடத்தப்படுகிறதோ அதே போன்று திருப்புதல் தேர்வும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நடத் தப்பட வேண்டும் என்ற பள்ளிக்கல்வித் துறை உத்தரவின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், 10ஆம் வகுப்பு மாண வர்களுக்கான அறிவியல் மற்றும் கணிதப் பாடதேர்வுகள் 14.2.2022 அன்று நடை பெற்றன. ஆனால், இந்த பாடங்களுக் கான வினாத்தாள் 13.2.2022 அன்று   காலையிலேயே சமூக ஊடகங்களில் வெளியானது. இந்த சம்பவம் தொடர் பாக அரசு தேர்வுகள் இணை இயக்குநர் பொன்.குமார், திருவண்ணாமலையில் விசாரணை நடத்தினார்.

அதேபோல், 14.2.2022 அன்று பிற்பகல் நடந்த பிளஸ் 2 மாணவர்களுக் கான வணிக வியல் தேர்வு வினாத்தாளும் ஞாயிற்றுக் கிழமை இரவு வெளியாகி யுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்துதான் இந்த வினாத்தாள் வெளி யாகியிருப்பது தெரிய வந்தது.

சென்னையில் 8 பள்ளிகளுக்கு நேற்றுகாலை 8 மணிக்கு அனுப்பப்பட்ட 10ஆம்வகுப்பு வினாத்தாளுடன் பிளஸ் 2 வணிகவியல் வினாத்தாளும் சேர்த்து வழங்கப்பட்டிருப்பதும், அந்த பள்ளி களில் இருந்துதான் வினாத்தாள் வெளியாகியிருப்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந் துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ், ‘‘திருப்புதல் தேர்வை பொறுத்தவரையில் இனிமேல் பள்ளி களுக்கு வினாத்தாள் முன் கூட்டியே அனுப்பப்படாது. தேர்வு தொடங்கு வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்புதான் அனுப்பப்படும்’’ என்று தெரிவித் தார்.

2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்த குமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘திருப்புதல் தேர்வுகளுக்கான வினாத்தாள், தேர்வு நடைபெறும் முன்பு சமூக வலைதளங்களில் வெளி வந்ததன் அடிப்படையில் துறை ரீதி யாக விரிவான கள ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பள்ளிகளில்இருந்து வினாத்தாள் வெளியானது கண்டறியப் பட்டுள்ளது. இதற்கு காரணமான பள்ளிகளின் நபர்கள் மீது குற்ற வியல்நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுத்துறை அளித்த வழிகாட்டுதல் களை பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப் பட் டுள்ளது.

No comments:

Post a Comment