அருப்புக்கோட்டை கவிஞர் நா.மா.முத்து - சந்திரபிரபா இணையரது மகன் மு.விஜயவிக்ரமன், பாலவனத்தம் அ.குமாரசாமி - செல்வி இணையரது மகள் கு.நதிமீனா இவர்களது மணவிழா 23.01.2022 ஞாயிறு காலை 9 மணியளவில், அருப்புக்கோட்டை அஜீஸ்நகர் நாச்சியார் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ப.க. புரவலர் ந.ஆனந்தம் தலைமையேற்று, மணமக்களை உறுதிமொழி ஏற்கச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தார். மாவட்ட கழக செயலாளர் விடுதலை தி.ஆதவன் வாழ்த்துரை வழங்கினார். நகர கழக. செயலாளர் பா.இராசேந்திரன், சி.பி.அய். பொறுப்பாளர் அ.இளங்கோ மற்றும் தோழர்கள், உறவினர்கள், நண் பர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மணவிழா மகிழ்வாக, நாகம் மையார் குழந்தைகள் இல்ல நிதியாக ரூ.500-/ம், அருப்புக்கோட்டை தந்தை பெரியார் படிப்பக நிதியாக ரூ.500-/ம் நன்கொடை வழங் கினர். நிறைவாக கவிஞர் நா.மா.முத்து நன்றி கூற விழா நிறைவுற்றது.
Monday, January 24, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment