சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தில் முதலமைச்சர் பதில்!
சென்னை, ஜன.7- சட்டப்பேரவையில் நேற்று (6.1.2022)கேள்வி நேரத்தின் போது, முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் அவர்கள் பதில ளிக்கையில், மெட்ரோ ரயில் இணைப்பை விரி வான திட்ட அறிக்கையின் அடிப்படையில் மீனம் பாக்கத்திலிருந்து கிளாம் பாக்கம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகக் குறிப்பிட்டார்.
சென்னை மெட்ரோ ரயில் சேவையை மீனம் பாக்கம் விமான நிலையத் திலிருந்து, பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீட்டிப்பது தொடர் பாக, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அளித்த பதில் வருமாறு :-
இ.கருணாநிதி: சென்னை மெட்ரோ ரயில் சேவையை மீனம் பாக்கம் விமான நிலையத்திலி ருந்து, பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீட்டிக்க அரசு ஆவன செய்யுமா?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்: உறுப்பினர் அவர்கள் கேட்ட கேள்விக்கான பதில். வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சென்னை மாநகருக்கான புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருவ தன் காரணமாக, மெட்ரோ ரயில் இணைப்பை மீனம் பாக்கம் விமான நிலையத் திலிருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனைக் கருதி, இந்தத் தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப் பதற்கான பணிகள் பன்னாட்டு நிறுவனத்தின் மூலமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான இறுதித் திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் தற்போது இருக் கிறது.
இந்த அறிக்கை யின் அடிப்படையில், பணிகளைச் செயல்படுத் துவதற்கான நடவடிக்கை களை அரசு தொடங்கி யுள்ளது என்பதை பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக உறுப்பினர் அவர் களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர்
மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிலளித்தார்.
No comments:
Post a Comment