இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அலைபேசி பரிசு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 5, 2021

இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அலைபேசி பரிசு!

ராஜ்கோட், டிச. 5- குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு அலைபேசி பரிசாக வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தடுப் பூசி செலுத்தும் பணிகள் வேக மெடுத்து வருகின்றன. கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தட்டுப்பாடில்லாமல் கிடைத்து வருவதால் பொதுமக்கள் அனை வருக்கும் இரண்டு தவணை தடுப் பூசிகளும் செலுத்த ஒன்றிய-மாநில அரசுகள் மும்முரம் காட்டி வரு கின்றன.

அதில் ஒரு நடவடிக்கையாக, குஜராத் மாநிலம்  ராஜ்கோட் நக ராட்சி ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 50 ஆயிரம் மதிப்பிலான அலை பேசி பரிசு என்பதே அந்த அறிவிப்பு ஆகும். இந்த அறிவிப்பு பொதுமக்களை அதிகமாக ஈர்த்துள்ளது.

ராஜ்கோட்டில் டிசம்பர் மாதம் 4ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதிக் குள்ளான காலகட்டத்தில் இரண் டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக் கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அலைபேசி பரிசு வழங்கப்படும் என்று ராஜ்கோட் நகராட்சி ஆணையர் அமித் அரோரா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:-

ராஜ்கோட் நகராட்சி சுகாதார மய்யங்களின் சார்பில் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப் பட்டுள்ளது. அதன்படி, மேற்குறிப் பிட்ட காலகட்டத்தில்  எந்த சுகா தார குழு அதிக எண்ணிக்கையி லான பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசியை செலுத்தி சாதனை படைக்கிறார்களோ அவர்களுக்கு ரூபாய் 21 ஆயிரம் ஊக்கத்தொகை யாக வழங்கப்படும். இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத் தும் பணியை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment