வில்லங்க சான்று ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

வில்லங்க சான்று ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்

தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, டிச. 3 தமிழ்நாட் டில் வீடு, மனை விற்பனை யின் போது அதை வாங்கு வோர், அந்த சொத்து தொடர்பான முந்தைய விவரங்களை அறிய வில் லங்க சான்று பார்ப்பது வழக்கம். இதற்காக, கடந்த காலங்களில் பொது மக்கள் வில்லங்க சான்று பார்க்க சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும். இதற்காக, ஒரு சர்வே எண்ணுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தின மும் பொதுமக்கள் வில் லங்க விவரம் கேட்டு வந் ததால், கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டது. இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில், கடந்த 2014 முதல் இணையதளம் வாயிலாக வில்லங்கச் சான்று பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஆரம்பத்தில் 1987ஆம் ஆண்டு வரை சொத்து விவரங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட் டன. இதனால், அந்த விவரங்களை பொதுமக் களால் இணையதளம் வாயிலாக பார்க்க முடிந் தது. இதை தொடர்ந்து 1.1.1975ஆம் ஆண்டு முதல் சொத்து குறித்த விவரங் களை அளித்தால் வில் லங்க விவரங்களை பெறும் வசதி கடந்த 2018 டிசம் பரில் தொடங்கி வைக் கப்பட்டது. இதன் மூலம் 1975ஆம் ஆண்டு வரையி லான வில்லங்கத்தை எளி தாக பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் வில்லங்க விவரங்களை இலவசமாக தெரிந்து கொள்வதுடன் பிரதியும் எடுத்துக் கொள் ளலாம் என்ற நிலை ஏற் பட்டது.

ஆனால், 1975க்கு முன் னர் உள்ள விவரங்களை பார்ப்பதில் சிக்கல் ஏற் பட்டதால், இது தொடர் பாக வில்லங்க சான்று பெற சார்பதிவாளர் அலு வலகங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக பதிவுத் துறை அய்ஜி சிவன் அரு ளிடம் பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்தனர். இதையேற்று கடந்த 1.1.1950 முதல் 31.12.1974 வரை உள்ள காலத்திற் குரிய சொத்து விவரங் களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வகையில் ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பதி வுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி உத் தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசா ணையில் கூறியிருப்பதா வது: 1.1.1950 முதல் 31.12.1974 வரையில் உள்ள ஆவணங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதன் படி, சென்னை மண்ட லத்தில் 15,10,799 ஆவணங் களும், கடலூரில் 23,49,220 ஆவணங்களும், கோவை யில் 17,58,802 ஆவணங்க ளும், மதுரையில் 41,02,469 ஆவணங்களும், சேலத் தில் 20,28,518 ஆவணங் களும், திருநெல்வேலி மண்டலத்தில் 42,37,916 ஆவணங்களும், தஞ்சா வூர்மண்டலத்தில் 19,87,827 ஆவணங்களும், திருச்சி மண்டலத்தில் 23,18,159 ஆவணங்களும், வேலூர் மண்டலத்தில் 19,87,402 ஆவணங்கள் என மொத்தம் 2 கோடியே 22 லட்சத்து 81 ஆயிரத்து 112 ஆவணங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் டிசிஎஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த நிறுவனம் பதி வேற்றம் செய்யும் ஆவ ணங்களை 100 சதவீதம் சார்பதிவாளர்களும், 5 சதவீதம் மாவட்ட பதிவா ளர்களும், 2 சதவீதம் டிஅய்ஜிக்களும் சரி பார்க்க வேண்டும்.

இணையதளத்தில் இந்த ஆவணங்களை பெறுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 கோடி அரசுக்கு வருவாய் கிடைக் கிறது. இந்த ஆவணங்களை இணையத்தில் பதிவேற் றம் செய்ய ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகி றது. நடப்பு நிதி யாண்டில் ரூ.11.50 கோடியும், 2022-23ஆம் நிதியாண்டில் ரூ.11.50 கோடி செல விடப் படுகிறது.

இணைய தளம் மூலம் இந்த ஆவணங்களை பெறு வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 கோடி வருவாய் அர சுக்கு கிடைக்கிறது.

No comments:

Post a Comment