வாசிங்டன், நவ. 27- ''கரோனா தொற்றை முற்றிலுமாக ஒழிக்க முடியாது; அதை கட்டுப்படுத்த மட்டுமே முடியும்,'' என, அமெரிக்க தொற்று நோயியல் நிபுணர் தெரிவித்தார்.
அய்ரோப்பா மற்றும் அமெரிக் காவின் பல பகுதிகளில் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிக ரிக்க துவங்கி உள்ளது.இந்த தொற்று பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து அமெரிக்க தொற்று நோயியல் நிபுணர் மருத்துவர் ஆன் டனி பாசியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
இந்த கேள்விக்கு யாருக்குமே பதில் தெரியாது. பொதுவாக தொற்று நோய்கள் பரவும் போது முதலில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும், அதன் பின் கட் டுப்படுத்தப்படும். படிப்படியாக தொற்று கட்டுக்குள் கொண்டுவரப் பட்டு பின் முற்றிலுமாக ஒழிக்கப் படும்.போலியோ, அம்மை நோய், மலேரியா போன்றவை அமெரிக்கா வில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கப் பட்டது.
அதைப் போல கரோனா தொற் றுப் பரவலை ஒழிக்க முடியுமா என்பது சந்தேகமே. அதைக் கட்டுப் படுத்த மட்டுமே முடியும். தடுப்பூசி ஒன்றே அதை கட்டுப்படுத்த கூடிய ஆயுதமாக உள்ளது.கட்டுப்படுத்து வது என்றால் எந்த எண்ணிக்கை வரை நாம் ஏற்றுக் கொள்ளப் போகிறோம் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. நாள் ஒன் றுக்கு 70 -முதல் 80 ஆயிரம் பேர் நாடு முழுவதும் பாதிக்கப்படுவது கட்டுப்படுத்தியது ஆகாது.
No comments:
Post a Comment