சிறீரங்கம்,நவ.27- ஜாதி வேறு பாடின்றி அர்ச்சகர்களை உருவாக் கும் வகையில், இந்து சமய அற நிலையத் துறை சார்பில் சிறீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயில் ஆகியவற்றில் ‘வைணவம்’ பயிற்சிக் கான ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவ்விவரம் வருமாறு:
'இறைவனை' வழிபாடு செய்ப வர்கள் அனைவரும் சடங்குகள், பூஜைகள் செய்ய ஜாதி வேறுபாடின்றி தகுதியான மற்றும் தேவையான பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்ககடந்த தி.மு.க. ஆட்சியில், மதுரை,பழநி, திருச்செந்தூர், திரு வண்ணாமலை ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர் களுக்கும், சென்னை, சிறீரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச் சகர்களுக்கும் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப் பட்டது. அதன் பின்னர் இவை செயல்படவில்லை.
இதனிடையே, தமிழ்நாடு அரசின் 2021-_2022-ஆம் ஆண்டுக் கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி ஜாதி வேறு பாடின்றி அர்ச்சகர்களை உருவாக் கும் திட்டத்தின் கீழ் சிறீரங்கம் ரங்கநாதர் கோயிலின் சார்பில் `வைணவம்’ (பாஞ்சராத்ர ஆகமம்), திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் `வைணவம்’ (வைகா னசம்) பயிற்சிக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை அறிவிப்புகள் அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த பயிற்சியில் சேருபவர்கள் இந்துக்களாகவும், 1.1.2022 அன்று 14 வயதுக்கு மேல் 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண் டும். குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றுஇருக்க வேண்டும். இந்து வைணவகோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவராக இருக்க வேண் டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு சீருடை, உணவு, தங்குமிடம் வசதிகளுடன், பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த பயிற்சியில் 40 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
இதுகுறித்து சிறீரங்கம் ரங்க நாதர் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து கூறுகையில், கடந்த முறை இந்த பயிற்சி சிறீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயில் வளா கத்தில் நடத்தப்பட்டது. தற்போது அங்கு போதுமான வசதிகள் இல் லாததால் யாத்ரி நிவாஸ் தங்கு மிடத்தில் தற்காலிகமாக பயிற்சி மய்யம் செயல்படவுள்ளது. இதற்கு இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான விண்ணப்பத்தை சிறீரங்கம் கோயில் இணையதளத்தில் இருந்து (<www.srirangam.org>) பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து டிச.24-ஆம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம் என்றார்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடைபெறும் பயிற்சிக் கான விண்ணப்பத்தை அறநிலையத் துறை இணையதளத்தில் இருந்து (hrce.tn.gov.in) பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து,டிச.26-ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அனைத்து ஜாதியி னருக்கும் அர்ச்சகர் உரிமையை நடைமுறைப்படுத்திவருவது குறிப் பிடத்தக்கது.
ஜாதி வேறுபாடின்றி அர்ச்சகர் நியமனத் திட்டத்தின்கீழ் இந்துசமய அறநிலையத் துறை சார்பில்கடந்த ஆக.14 அன்று 56 அர்ச்சகர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழங் கினார். அவர்களில் 22 பேர் தமிழ் நாடு அரசு 2007-ஆம் ஆண்டு நடத்திய பயிற்சி நிலையங்களில் பயிற்சிப் பெற்றவர்கள் ஆவர்.
No comments:
Post a Comment