வீரபாண்டி ஏ.ராஜா மறைவு கழகத் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 2, 2021

வீரபாண்டி ஏ.ராஜா மறைவு கழகத் தலைவர் இரங்கல்

சேலத்தின் தி,மு.. செயல் வீரர்களில் முக்கியமான வரும், சட்டமன்ற மேனாள்  உறுப்பினருமான, அன்பு சகோதரர் திரு. வீரபாண்டி .ராஜா  (வயது 58) அவர்கள் இன்று (2.10.2021)   சேலம் வீரபாண்டியில் மாரடைப்புக் காரணமாக திடீரென்று காலமானார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும், துயரத்திற்கும்  உரியதாகும்.

இன்று அவரது பிறந்த நாள் ஆகையால், அவரது தந்தை சேலத்து சிங்கம், கொள்கை வீரர், வீரபாண்டி எஸ். ஆறுமுகம் அவர்களது சிலைக்கு மாலை அணிவிக்கப் புறப்பட்ட நிலையில் இப்படி ஒரு திடீர் மரணம் ஏற்பட்டது என்ற செய்தி எவரையும் கலங்கச் செய்யும் செய்தியாகும்.

தி.மு..வின் சிறந்த தொண்டராக, செயல் வீரராகத் திகழ்ந்து - இயக்கத்திற்கென உழைப்பையும் ஈந்த அவரது இழப்பு அக்குடும்பத்திற்கு மட்டுமல்ல, தி.மு..விற்கும் ஈடு செய்ய இயலாத மாபெரும் இழப்பு ஆகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், இயக்கத்தவர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

 

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்               

2-10-2021           

No comments:

Post a Comment