நூல் அறிமுகம்:
நரகாசுரப் படுகொலை
ஆசிரியர்:
அருப்புக்கோட்டை எம்.எஸ்.இராமசாமி
திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
பெரியார் திடல்,
84/1 (50) ஈ.வெ.கி.சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-7
பக்கங்கள்: 56
நன்கொடை: ரூ 30/-
தந்தை பெரியார் அவர்களின் முன்னு ரையுடன் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த ஆராய்ச்சி நூல் இது. இதன் புதிய பதிப்பை பெரியார் ஆவணக் காப்பகத்திலிருந்து திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.
தீபாவளி தொடர்பான ஆராய்ச்சி நூலான இந்த நூலில் புராணங்களை ஆராய்ச்சி செய்து, குறிப்பாக பாகவதம், விஷ்ணுபுராணம் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றில் வரும் குறிப்பு களைக் கொண்டேஇரண்யாட்சன் யார்? நரகாசுரன் யார்? அவர்கள் செய்த செயல் பாடுகள், நரகாசுரனைக் கொல்ல வேண்டிய நிலை ஆரியர்களுக்கு ஏன் ஏற்பட்டது? போன்றவற்றை விளக்கி எழுதியுள்ளார் நூலாசிரியர்.
ஆரியர்களின் காட்டுமிராண்டிக் காலத்தில் உருவாக்கப்பட்டு பரப்பப் பட்ட இந்தக் கதை குறித்த அறிவுப்பூர் வமான கேள்விகளை எழுப்பி, புராணப் பண்டிதர்களையும் வைதீகர்களையும் திணறடிக்கிறார் நூலாசிரயர்.
இறுதியாக இந்தத் தீபாவளிக் கதை ஆரிய திராவிடப் போராட்டத்தால் ஏற் பட்ட கற்பனைக் கதையே என்று விளக்கு கிறார்.
இந்த நூல் குறித்து தந்தை பெரியார் எழுதிய முகவுரை,
"நரகாசுரன் என்பதாக ஒருவன் இருந்தானோ, இல்லையோ என்பதும், நரகாசுரன் வதை சம்பந்தமான கதை, பொய்யோ, மெய்யோ என்பதும்பற்றி, நான் கவலை எடுத்துக் கொள்ளவில்லை. இப்படிப்பட்ட கற்பனைகளைச் செய்து, ஆரியர்கள் அவற்றை நம் தலையில் சுமத்தி, நம்மை அதற்கு ஆளாக்கி, தங்கள் உயர்வுக்கும், நமது இழிவுக்கும், தங்கள் வாழ்வுக்கும், நமது தாழ்வுக்கும், அவர்கள் நலத்திற்கும், நமது கேட்டிற்கும், அவர்கள் சமர்த்துக்கும், நம் முட்டாள் தனத்துக்கும், நிரந்தர ஆதரவாக்கிக் கொண்டு, பாடும், கவலையுமில்லாமல் சுகபோகிகளாய் இருந்து, நம்மைச்சுரண்டி வருகிறார்களே என்பதற்காகவே, நான் கவலைப்பட்டு இதன் தன்மையை, நம் திராவிட மக்களுக்கு உணர்த்து வதற்கு ஆக பொதுவாகவே, ஆரிய சாஸ்திர புராண இதிகாசங்களின் ஆபாசங்களையும், காட்டுமிராண்டித் தனங்களையும், விளக்கும் தொண்டை எனது வாழ்வின் முக்கிய தொண்டுகளில் ஒன்றாகக் கொண்டு, பணியாற்றி வருகிறேன். அதனாலேயே இப்படிப்பட்ட புத்தகத் திற்கு என்னை முகவுரை எழுதக் கேட்டார் கள் என்பதாகக் கருதியே, எழுதச் சம் மதித்தேன்.
திராவிட மக்கள் அருள் கூர்ந்து, நரகா சுரன் வதைப் புராணத்தை, சற்று பகுத் தறிவோடு சிந்திக்க வேண்டும். கதையின் சுருக்கம் என்னவென்றால்; நரகாசுரன் என்கிற அசுரன், அயோக்கியனாக இருந் தான். கடவுளால் கொல்லப்பட்டான். பொதுமக்கள் அவனுடைய சாவுக்காக, மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதே யாகும்;
ஆனால், இதற்காக சித்தரித்த கதை யின் தன்மை எப்படிப்பட்டது? அதன் உள் கருத்து எப்படிப்பட்டதாய் இருக்கும்? இந்த 20ஆம் நூற்றாண்டாகிய விஞ்ஞான காலத்தில், இதை நம்பி இக்கருத்துக்கு ஆளாகலாமா? என்பதைச் சிந்திக்கத் தான், இந்த நரகாசுரப் படுகொலை என்கின்ற புத்தகம், அருப்புக்கோட்டை தோழர் வி.ஷி. இராமசாமி அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. இந்த மூலக் கதைக்கு, நரகாசுரன் தேவையே இல்லை என்றாலும், திராவிடர்களை இழிவுபடுத்து வதற்கு என்று, எழுதப் புகுந்த கற்பனை யில், ஆரியர்களது நிலை, தன்மை ஆகி யவை எவ்வளவு இழிவாகக் கூடியதாயி ருந்தாலும், அதைப்பற்றிக் கவலைப்படா மல், இக்காரியத்தில் புகுந்திருக்கிறார்கள்.
இதற்கு ஒரு சமாதானம் என்னவாக இருக்குமென்றால், இக்கதை தொகுத்த காலத்தில், ஆரியர்கள், அவ்வளவு காட்டு மிராண்டிகளா கவும், அவ்வளவு மானா வமானக் கவலையற்ற மிருகவாழ்வு வாழ்ந்தவர்களாகவும் இருந்திருக்கலாம் என்பதாகக் கொள்ளலாம். என்றாலும், இக்காலத்திலுள்ள ஆரியர்களும்; அதா வது, எவ்வளவோ விஞ்ஞான அறிவு, பகுத்தறிவு, மான உணர்ச்சி கொண்ட இக்கால ஆரியர்களும், இந்த, இதுபோன்ற ஆபாசக் கதைகளைக் காப்பாற்றி பிரசாரம் செய்து, மக்களையும் அவற்றை நம்பி நடக்கும்படி செய்கிறார்கள் என்றால், நம் மக்கள் நிலை அதைவிட காட்டு மிராண்டித் தனமானதும் மானாவமான லட்சியமற்றதும், மிருகப் பிராயத்திலிருப் பதும், அல்லது அப்படியெல்லாம் இருப்பதாக அவர்கள் கருதி இருப்பதா கவாவது இருக்கலாம்.
எப்படி இருந்தாலும், இனியாவது பகுத்தறிவோடு, மான உணர்ச்சியோடு, சிந்திக்க வேண்டியது திராவிடர் கடமை யாகும்.
ஆரியக் கற்பனையாகிய இக்கதையில் உள்ள முக்கிய சில குறிப்புகளை மாத்திரம் குறிப்பிடுகிறேன்.
1. இரணியாட்சன் என்கிற இராக் கதன், பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்திற்குள் போய் பாதா ளத்தில் ஒளிந்து கொண்டது.
2. மகாவிஷ்ணு என்கின்ற கடவுள், பன்றி உருவம் எடுத்து, சமுத்திரத்திற்குள் புகுந்து, இராக்கதனைக் கொன்று, பூமியை எடுத்துக்கொண்டு வந்து விரித்துவிட்டது.
3. இந்த விஷ்ணுப் பன்றியைக் கண்டு, பூமிதேவி காம விகாரப்பட்டுப் போகித்துக் கலவி செய்தது.
4. இக்கலவியின் பயனாய் ஒரு பிள்ளை பிறந்து, அப்பிள்ளை ஓர் அசுர னாக ஆகி, ஒரு இராஜ்ஜியத்தை ஆளும், அரக்கனாகி, தேவர்களுக்கு (ஆரியர்க ளுக்கு, தன் தாய் தந்தையான கடவுளுக் கும்) கேடு செய்தது.
5. பிறகு, அந்த நரகாசுரனைக் கடவு ளும் கடவுள் மனைவியும் கொன்றது.
6. அந்தக் கொலைக்கு, மக்கள் மகிழ்வது.
7. அந்த மகிழ்ச்சிக்குப் பேர்தான் தீபாவளி கொண்டாட்டம்.
என்பனவாகிய இந்த ஏழு விஷயங்களை திராவிட மக்கள் மனித புத்தி கொண்டு சிந்திக்க வேண்டும் என்பதே, இப்புத்தகம் எழுதியவருடைய ஆவல்.
ஆதலால், பொதுமக்கள் இதை இந்தப் புத்தகத்தின் உதவியைக் கொண்டு நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்து தீபா வளி கொண்டாட வேண்டியது அவசியம் என்றுபட்டால் அந்தப்படி செய்யுங்கள். அதுவே ஆசிரியருக்கு மக்கள் கைம்மாறு ஆகும்.
இப்புத்தகம் எழுதியதற்காக தோழர் ஆ.ளு.இராமசாமிக்கு திராவிடர் சார்பாக எனது நன்றி உரித்தாகுக." என்கிறார் தந்தை பெரியார்.
தீபாவளிக் கதையை தோலுரிக்கும் இந்நூல் அனைவராலும் பரப்பப்படே வேண்டிய நூலாகும்.
No comments:
Post a Comment