வழிபாட்டுத்தலங்களுக்கான 3 நாள் தடை தொடரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 30, 2021

வழிபாட்டுத்தலங்களுக்கான 3 நாள் தடை தொடரும்

தமிழ்நாட்டில் நவம்பர் 1-ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, செப்.30 வழிபாட்டுத் தலங்களுக்கான 3 நாள் தடை தொடரும் என்றும், நவம்பர் 1ஆம் தேதி முதல் 1-ம் வகுப்பில் இருந்து 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கவும் முதலமைச்சர் மு.. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக குறைந்தபாடில்லை. தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்த வண்ணம் இருந்ததால் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட வில்லை .

முதலமைச்சர் மு..ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்

9 முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப் பட்டு உள்ளன. கடும் கரோனா கட்டுப்பாடு களுடன் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குள் அனுமதிக் கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளி களை திறப்பது குறித்து கல்வித்துறை அதிகா ரிகளுடன் ஆலோசனை நடத்தி, முதலமைச்சர் மு..ஸ்டாலி னிடம் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது. இதனையடுத்து மு..ஸ்டாலின் எப்போது அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர் பார்ப்பு நிலவி வந்தது.

ஆலோசனை கூட்டம் இதற் கிடையே கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர் பாக, முதல் -அமைச்சர் மு..ஸ்டாலின் தலை மையில் 28.9.2021  அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

இந்த கூட்டத்தில், எதிர் வரும் பண்டிகை காலங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்வது குறித்தும், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட் டது. இது தொடர்பாக, முதல்-அமைச்சர் மு..ஸ்டா லின் வெளியிட்டுள்ள அறி விப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ் நாட்டில், கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப் படுத்தும் வகையில், அரசு ஆணை எண் 5:52, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 11-.9-.2021-ன் படி, 31-.10-.2021 காலை மணி வரை தளர்வுக ளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரு கிறது.

கரோனா நோய்த் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண் டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினை கருத் தில் கொண்டும், தலைமைச் செயல கத்தில் முதலமைச் சர் மு..ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

3 நாட்கள் வழிபாட்டுத் தலங்கள் மூடப்படும்

இதன் அடிப்படையில், எதிர் வரும் காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பரவக் கூடும் என்பதை கருத் தில் கொண் டும், நோய்த் தொற்று பரவலை கண்கா ணித்து தொடர்ந்து கட்டுப்ப டுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், அரசு ஆணை எண் 552, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை, நாள் 11-.9-.2021-ன் படி, விதிக்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகள் 31-.10-.2021 காலை மேணி வரை தொடர்ந்து அமலில் இருக் கும், சமுதாயம், அரசியல், கலா சார நிகழ்வுகள், திருவிழாக்கள். குட முழுக்கு உள்ளிட்ட செயல் பாடு களுக்கு ஏற்கெனவே விதிக்கப் பட்ட தடை தொடர்ந்து நடை முறையில் இருக்கும், நோய்த்தொற்று பர வாமல் இருக்க பெருமள வில் மக்கள் ஒன்று கூடக்கூ டிய நாட்களாகிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமை களில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

குறைதீர்க்கும் நாள் நடத்த அனுமதி

மேலும், ஏற்கனவே அனும திக்கப்பட்டுள்ள செயல்பாடு கள், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு களுடன் தொடர்ந்து அனுமதிக்கப் படும், பொதுமக்கள், தங்களது குறை களுக்கு தீர்வு காணும் பொருட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென் னைக்கு வருகைபுரிந்து தலைமைச்செயலகத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்து வருகின்றனர், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் நோக்குடன், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், திங்கட்கிழமை தோறும், பொது மக்கள் குறை தீர்க்கும் நாள், மாதந்தோறும் விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் ஆகிய வற்றை கரோனா நிலை யான வழி காட்டு நடைமு றைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப் படுகிறது.

நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

மேலும் மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்ப டி, 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, -மாணவிய ருக்காக பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

அதேபோல், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ-, மாணவியர் பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டி லேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும், இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற் றோர்கள் தெரிவித்ததை கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவ,-மாணவியருக்கான வகுப்புகள், கரோனா நிலையான வழி காட்டு நடைமுறைகளை பின் பற்றி 1-.1-.2021 முதல் நடத்த அனு மதிக்கப்படும். அதற் கான முன் னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும். வழிகாட்டு நடைமுறைகள் மாவட்ட ஆட்சியர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் சிறப்புதடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொது மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கடைகளிலும், பொதுமக் கள் அதிகம் கூடும் இடங்களிலும் எதிர்வரும் விழாக்காலத்தை கருத் தில் கொண்டு, முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின் பற்ற வேண்டும்.

கடைப்பிடிக்க வேண்டும்

எதிர்வரும்  மத நிகழ்வுகள்  காலத்தில் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன்இருக்குமாறும், கூட்டம் கூடக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், உரிய கட்டுப் பாடுகளால் மட்டுமே கரோனா 3ஆவது அலை யை தவிர்க்க இயலும் என்பதை உணர்ந்து அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்து ழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து வணிக நிறுவனங் களும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள் கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment