தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது - மக்களவை உறுப்பினர் கனிமொழி பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 1, 2021

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது - மக்களவை உறுப்பினர் கனிமொழி பேட்டி

தூத்துக்குடி, ஆக.1   தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, தூத்துக் குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப் படாது என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி  கூறினார்.

இதுகுறித்து அவர் தூத்துக்குடியில்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் வாக்குறுதிகளை முதல மைச்சர் மு..ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது.

கடந்த .தி.மு.. ஆட்சியில் கரோனா பரவல் 2ஆம் அலை அதி கரித்தபோது, ஆக்சிஜன் பற்றாக் குறையை சமாளிப்பதற்காக, ஸ்டெர் லைட் ஆலை திறக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனாலும் அந்த ஆலை குறிப்பிட்ட அளவுக்கு ஆக்சிஜன் தரமுடியாதபோதும், ஓரள விற்கு உற்பத்தி செய்து தந்துள்ளனர்.

தற்போது ஆக்சிஜன் தேவை இல் லாத நிலையில், ஸ்டெர்லைட் ஆலை யில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட் டுள்ளது. ஏற்கெனவே அங்கு உற்பத்தி செய்து வைத்துள்ள ஆக்சிஜனை பாது காப்பாக வைத்திருப்பதற்காக குறைந் தளவு மின்சாரம் வழங்கப்படுகிறது.

உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை முழுமையாக வெளியே கொண்டு வந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப் பட்ட மின்சாரம் நிறுத்தப்படும்.

கேரளாவில் கரோனாவின் 3ஆம் அலை தொடங்கும் அறிகுறி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் கரோனா 3ஆவது அலை வந்தாலும் அதனை சமாளிப்பதற்கான அனைத்து நடவடிக் கைகளையும் முதலமைச்சர் மு..ஸ்டாலின் எடுத்து வருகிறார்.

பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. தேவையானால் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆக்சிஜனை பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் .தி.மு.. செய்ய முடியாத சாதனைகளை, முதல மைச்சர் மு..ஸ்டாலின் பதவியேற்ற 100 நாட்களுக்குள் செய்து முடித்துள் ளார். இதனை பொறுக்க முடியாத .தி.மு..வினர் காழ்ப்புணர்ச்சியால் தேவையில்லாத போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment