ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப்பவர்களைத் தடுக்கக் கூடாது உலக நாடுகள் கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 31, 2021

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப்பவர்களைத் தடுக்கக் கூடாது உலக நாடுகள் கோரிக்கை

வாசிங்டன், ஆக. 31- ஆப்கா னிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாடுகள் பலவும் ஆப்கானில் இருக்கும் தங் கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து பாதுகாப் பாக வெளியேற்றும் நட வடிக்கையில் உடனடி யாக இறங்கின.

இதற்கிடையில் தலிபான்களின் கொடுங் கோல் ஆட்சியின் கீழ் வாழ விரும்பாத ஆப்கான் மக்களும் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கி னர்.

காபூல் விமான நிலை யம் நோக்கி வரும் ஆப் கான் மக்களை தாலிபான் கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பதாக தகவல் வெளியானது.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப் பவர்களைத் தடுக்க மாட் டோம் என்று தலிபான் கள் வாக்குறுதி அளித்த னர். அதனை நிறைவேற்ற வேண்டும் என்று அமெ ரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் உள்பட 90 நாடு கள் விடுத்த கூட்டறிக் கையில் வலியு றுத்தப் பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில்  வசிக்கும் வெளிநாட்ட வர்கள் மற்றும் ஆப்கா னிஸ்தானியர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு, தலிபான்கள் எந்தவிதத் தடையும் விதிக்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் வலியுறுத் தப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கையில் அமெரிக்கா, ஆஸ்திரே லியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, உக் ரைன் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் கைª யழுத்திட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment