கல்வித் தொலைக்காட்சிக்கு 4 அலைவரிசைகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

கல்வித் தொலைக்காட்சிக்கு 4 அலைவரிசைகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

திருச்சி, ஜூலை 1- திருச்சி எடமலைப் பட்டிப் புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற் கொண்ட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி  செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

''அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவ- மாணவிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் அரசுப் பள்ளிகளின் உட்கட்ட மைப்புகளை மேம்படுத்துவது, ஆசிரியர்கள் பற்றாக்குறையைக் களைய நடவடிக்கை எடுப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அரசுப் பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்து வருகிறேன்.

ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கையை முதல் அமைச்சர் மு..ஸ்டா லின் தலைமையில் ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் அளிக்க உள்ளேன். அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்தும் முதல்வரின் கவனத் துக்கு எடுத்துச் சென்று நிறை வேற்றப்படும். 

தற்போது கல்வித் தொலைக் காட்சிக்கு ஒரு அலைவரிசை மட்டுமே உள்ள நிலையில், மழலையர் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை, 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை,

9 மற்றும் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என 4 அலைவரிசைகள் தொடங்குவது குறித்து ஆலோ சனை நடத்தி வருகிறோம்.

பள்ளிகளில் 30 மாண வருக்கு ஒரு ஆசிரியர் என்கிற அளவில் அமல்படுத்தப்படும்''.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

No comments:

Post a Comment