பெண் மருத்துவருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கரோனா தொற்று பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

பெண் மருத்துவருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கரோனா தொற்று பாதிப்பு

மும்பை, ஜூலை 31 மும்பையைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையின் முலுன்ட் பகுதியில் உள்ள மும்பை மாநகராட்சியின் வீர்சாவர்க்கர் மருத் துவமனையில் கரோனா நோயாளி களுக்கான பிரிவில்  மருத்துவர் ஸ்ருஷ்டி டி ஹலாரி (வயது 26) பணியாற்றி வந்தார்

கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதியன்று முதன்முதலில் இவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட் டுள்ளது. அந்த நேரத்தில் பெரிய அறி குறிகள் எதுவும் இல்லாமல் இருந்தது.

ஸ்ருஷ்டி தனது மூன்று மாத வேலையை முடித்துவிட்டு, தனது எம்.டி மற்றும் அமெரிக்காவில் உயர் மருத்துவ படிப்பிற்கான தயாரிப்புகளைத் தொடங்க  தனது வீட்டிற்குத் திரும்பினார். தொடர்ந்து  ஸ்ருஷ்டி  கரோனா தடுப்பூசி கோவிஷீல்டின் முதல் டோஸை இந்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியும், இரண் டாவது டோஸை ஏப்ரல் 29ஆம் தேதியும் போட்டுக்கொண்டார்.

அவரது குடும்பம் குஜராத்தின் தோலேராவைச் சேர்ந்தது. அவரது பெற்றோர் (தீபக் மற்றும் வைஷாலி) மருத்துவர்கள் ஆவர். அவரது தம்பி தவால் மருத்துவம் படித்து வருகிறார். அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இருப்பினும், தடுப்பூசி செலுத்தப் பட்ட ஒரு மாதம் கழித்து மே 29ஆம் தேதி மருத்துவர் ஸ்ருஷ்டி இரண்டாவது முறையாக கரோனாவால்  பாதிக்கப் பட்டார். இந்த முறை லேசான அறிகுறி களுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பின் மீண்டும் ஜூலை 11ஆம் தேதி இவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறை அவரின் குடும்பத்தில் உள்ள நான்கு பேரும் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து ஸ்ருஷ்டி கூறும் போது மூன்றாவது முறையாக கரோனா பாதிப்பு ஏற்பட்டதும் நான் அதிகம் கஷ்டப் பட்டேன். நானும் என் குடும்பமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டோம். ரெம்டெசிவிர் மருந்து தேவைப் பட்டது. இப்போது, நான்காவது முறையாக கரோனா இல்லை என்பதை உறுதி செய்வோம்  என கூறினார்.

இது குறித்து மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மற்றும் விஞ்ஞானி டாக்டர் பிரதீப் மகாஜன் கூறும் போது  கரோனாவுக்கு நிரந்தர சிகிச்சை இல்லை.

வைரஸ் பிறழ்வைத் தொடர்ந்து கொண்டிருப்பதால் இது முழு தடுப் பூசிக்குப் பிறகும் தாக்கக்கூடும், எனவே தடுப்பூசி என்பது கரோனாவை  முழுவது மாக தவிர்ப்பதற்கான 100 சதவீத உத்தரவாதம் அல்ல.

வைரஸ் மரபு பிறழ்ந்தவர்களின் கண்டறிதலின் வீதத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டும் கட்டாயமாகிவிடும். சில உலகளாவிய மருந்து நிறுவனங்களும் அய்ரோப்பாவிலும் பிற நாடுகளிலும் மூன்றாவது பூஸ்டர் ஊசியை பெற மக்களை ஏற்கெனவே தயார்படுத்தி வருவ தாகவும் கூறினார்.

இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:-

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் கரோனா பாதிப்பு  ஏற்படாது என்பதில்லை. இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட பிறகும் கரோனா பாதிப்பு ஏற்படலாம்.ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நோயின் தாக்கம் குறைவாகவோ, மருத் துவமனையில் அனுமதிக்கவேண்டிய அவசியம் இல்லாத வகையிலோ இருக் கும். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் கரோனா பாதிப்பு ஏற்படும் போது, அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்காது என கூறினர்.

No comments:

Post a Comment