சில பள்ளிக்கூடங்களை புராணகால ‘பிருந்தாவனங்களாக்கிடும்' ‘பாபா'க்களுக்குப் பஞ்சமே இல்லை.
‘‘தீராத
விளையாட்டுப் பிள்ளை
தெருவெல்லாம்
பெண்களுக்கு ஓயாத தொல்லை!''
என்று
பாடுவது, நாடகங்களிலும், சினிமாக்களிலும் காட்சிகளாக இடம்பெறுவது இன்று மாறி, பல பள்ளிகளையே பள்ளியறைகளாக
மாற்றத் துடிக்கும் படுபாதகங்கள் மலிந்துள்ளதாக நாளும் வரும் செய்திகள் பெற்றோரை மட்டுமல்ல, மனிதநேயமும் - பெண் கல்வி பெருகவேண்டும் என்று நினைத்துப் போராளிகளாக களத்தில் நிற்பவர்களையும் அதிர்ச்சியையும்,
வேதனையையும் அடையச் செய்துள்ளன. அதுவும் கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில்!
இந்த
கயமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டாமா?
பல
வழக்குகள் நிரூபிக்கப்பட்டு, உரிய தண்டனை பெற்றுத்தரும் வகையில் புலன் விசாரணையும், நீதி வழங்கலும் அமைவது முக்கியம். (ஒரு காவல்துறை அதிகாரி கூறுகிறார்: ‘‘65 விழுக்காடு வழக்குகளில் குற்றவாளிகள்‘விடுதலை' ஆகும் வேதனை நிலை உள்ளது'' என்று குறிப்பிடுவதை காவல்துறை அதிகாரிகளும், ஆட்சியாளரும் அலட்சியப்படுத்தக் கூடாது).
குற்றவாளிகள்
தண்டிக்கப்பட்டால்தான்,
அத்தகைய பாலியல் குற்றவாளிகளின் கொட்டம் - விஷமம், இளம் பெண் பிள்ளைகளின் வாழ்வோடு விளையாடும் கொடுமை அறவே துடைத்தெறியப்படும் நிலை ஏற்படும்.
பத்ம
சேக்ஷாத்திரி பள்ளி, வேதாந்திரி மகரிஷி, செட்டிநாடு வித்யாஷ்ரமம், நீலாங்கரை சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளி முதலான
பள்ளிகளில் நடந்துள்ள
பாலியல் குற்ற நடவடிக்கைகள்பற்றி
(16.6.2021) ‘ஜூனியர்
விகடன்' இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையின் ஒரு பகுதி இதோ:
‘‘சிவசங்கர்
பாபா ஆசிரமத்துக்குள் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளியில் நான் பிளஸ் டூ வரை படித்தேன்.
பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலும் அவரின் பக்தர்கள்தான். ஆசிரமத்துக்குள் பள்ளிகளைத் தவிர, மகரஜோதி காலனி, கல்கி கார்டன், பழனி கார்டன் ஆகிய குடியிருப்புகளில் அவரை ‘கடவுளாக வணங்கும்' குடும்பங்கள் வசித்து வருகின்றன.''
‘‘4, 5 ஆம்
வகுப்புப் படிக்கும் மாணவிகள் வரை அனைவரையும் சிவசங்கர் பாபா கட்டிப் பிடித்து நெற்றியில் முத்தம் கொடுப்பார். குறிப்பாக, தேர்வு நேரத்தில் ஆசி வழங்குவதாகக் கூறி, மாணவிகளுக்கு லிப் டூ லிப் முத்தம்
கொடுப்பார். ஆசிரியர்களிடம் புகார் சொன்னால், அது பாபாவின் ஆசீர்வாதம் என்று அவர்கள் சொல்வார்கள்.
அவ்வப்போது
வகுப்பறைக்கு விசிட் செய்யும் சிவசங்கர் பாபா, ஆசீர்வாதம் என்கிற பெயரில் மாணவிகளைக் கட்டிப்பிடித்து, தொடக்கூடாத இடங்களில் தொடுவார். அந்தப் பள்ளியில் அவர்களின் அக்கா, தங்கை படித்தால், அவர்களின் விவரங்கள், அவரது டேபிளுக்குச் சென்றுவிடும். இருவரையும் அழைத்து மடியில் அமர்த்திக் கொள்வார். பிறகு, ‘நான் கிருஷ்ணன், நீங்கள் ராதைகள்' எனக் கூறி, என்னுடன் நீங்கள் சந்தோஷமாக இருந்தால்தான் இந்தப் பிறவிப் பலனை அடைய முடியும்!' என்று பேசி, பாலியல் தொல்லை கொடுப்பார்.
சிவசங்கர்
பாபாவைக் கடவுளாகவே பார்க்கவேண்டும் என்று ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்களை மூளைச் சலவை செய்துவிடுகிறார்கள்.
ஒரு
கட்டத்தில் அவரைக் கடவுளாகவே மனதில் பதிய வைத்து, அவரது பாலியல் அத்துமீறல்களைத் தவறு என்று நினைக்க முடியாத வகையில் உளவியல் ரீதியாக மாணவிகளை மாற்றி விடுகிறார்கள்! சுமார் 20 ஆண்டுகளாக இந்தக் கொடுமைகள் நடந்து வருகின்றன.''
இத்தகைய
நவீன கிருஷ்ண லீலா வினோத பாபாக்கள் இருக்கவேண்டிய இடம் ஆசிரமமா? சிறைச்சாலையா?
சட்டம்
பாயட்டும் - நீதி நிலைக்கட்டும்!
No comments:
Post a Comment