ஜூன் 3 முதல் 6ஆம் தேதி வரை கரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும்: - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 1, 2021

ஜூன் 3 முதல் 6ஆம் தேதி வரை கரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும்: - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை, ஜூன் 1 மத்திய அரசு தாமதத்தால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி முடங்கும் அபாயம் உள்ளது என சுகாதாரத்துறை செயலா ளர் ராதாகிருஷ்ணன்கூறி உள்ளார்.

தமிழகத்தில் அதிக ரித்து வந்த கரோனா பரவல் நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அம ல்படுத்தப்பட்டுள்ளது.  இதனிடையே தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதற்கிடையில் தமிழ கத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரு வதாக செய்திகள் வெளி யாகின.  தற்போது கையி ருப்பில் 5 லட்சம் தடுப் பூசிகள் உள்ளன என்றும் இரண்டு நாள்களுக்கு மட்டுமே போதுமானது என்ற தகவல் வெளியா கியது.

இந்நிலையில்,  தமிழ கத்தில் நிலவி வரும் தடுப் பூசி தட்டுப்பாடு குறித்து சுகாதாரத்துறை செயலா ளர் ராதாகிருஷ்ணன் மத்திய அரசின் சுகாதா ரத்துறை அதிகாரிகளு டன் நேற்று (31.5.2021) பிற்பகல் ஆலோசனை நடத்தினார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர்  சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீடு செய் வதில்  மத்திய அரசு தாம திப்பதால் தடுப்பூசி போடும் பணி முடங்கும் அபாயம் உள்ளது. தற் போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் 2 நாள்களுக்கு மட்டுமே போதுமானது. தடுப்பூசி கொள்முதல் செய்ய தமி ழக அரசு பணம் செலுத் திய பிறகும் தடுப்பூசி விநி யோகம் தாமதமாகிறது.

தடுப்பூசி போட பொதுமக்கள் தற்போது அதிகம் ஆர்வம் காட்டு கின்றனர். தடுப்பூசி இல்லாததால், ஜூன் 3 முதல்  5 வரை தடுப்பூசி போட முடியாது.ஜூன் 6இல் முதல் கட்டமாக 3 லட்சம் தடுப்பூசிகள் தமி ழகத்திற்கு வரும்

தமிழகத்திற்கு இதுவரை 96.10 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 87.70 லட்சம் தடுப் பூசிகள்  பயன்படுத்தப் பட்டு உள்ளன.  நாளை யோடு தடுப்பூசி இருப்பு தீர்ந்துவிடும்.

உலகளாவிய டெண் டர் கேட்டுள்ளோம். ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு கூறியுள்ளது.மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்திற்கான 1.74 லட்சம் தடுப்பூசி டோஸ் வரவேண்டியுள்ளது.ஜூன் 2ஆவது வாரத்தில் தடுப்பூசிகள்  கிடைக்கப் பெறும்

இறப்பு சான்றிதழ் ஆய்வுக்கு பின் வழங்கப் படும்.  இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment