வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 18, 2020

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்

பட்டினிப் போராட்டத்தில் தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் சூளுரை

சென்னை, டிச.18 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி  டில்லியில் போராட் டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை, புதுச்சேரியில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக சென்னை வள் ளுவர் கோட்டம் அருகே இன்று (18.12.2020) ஒருநாள் அடையாள பட்டினிப் போராட்டம் நடக்கும் என்றும், திமுக  கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அறி வித்திருந்தனர்.

தடையைமீறி பட்டினிப் போராட்டம்

இந்நிலையில், பட்டினிப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அனுமதி மறுத்தாலும் தடையைமீறி பட்டினிப் போராட் டம் நடத்தவும், கைது செய்யப்பட்டாலும் பட்டினிப் போராட்டத்தைத் தொடரவும் திமுக கூட்டணி கட்சிகள் முடிவு செய்தன.

அதன்படி இன்று வள்ளுவர் கோட்டத்தில் பட்டினிப் போராட்டம் காலை 8 மணிக்குத் தொடங்கியது . திமுக தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பட்டினிப் போராட்டத்தில் தோழமை கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் களும் பட்டினிப் போராட்டத்தில் பங்கேற் றுள்ளனர். திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.

இதில் .தி.மு. பொதுச்செயலாளர் வைகோ, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மற்றும்  கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண் டனர்.

பட்டினிப் போராட்டத்தில் உரையாற்றிய தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டலின் கூறும் போது, ‘‘வேளாண் சட்டங்களை  கொண்டுவரு வதற்கு முன்பு  விவசாய சங்கங்களுடன் பேசி இருக்க வேண்டும். விவசாயிகள் நலன்பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும்.

கரோனா காலத்தை சாதகமாக பயன்படுத்தி அவசர, அவசரமாக சட்டங்கள் இயற்றப் படுகின்றன. விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் டில்லி மாநகரமே கொதித்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் குடும்பம் குடும்பமாக, கூட்டம் கூட்டமாக போராட்ட களத்தில் குவிந்து வருகின்றனர். யாரை பாதுகாக்க இந்த வேளாண் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்? போராட்டம் நடத்தி வருபவர்களை மத்திய அரசு தேச விரோதிகள் என்று கூறி வருகிறது.''

இவ்வாறு தி.மு.. தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் உரையாற்றினார்.

No comments:

Post a Comment