என் மீது போடப்பட்ட வழக்கைப் பயன்படுத்தி ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் - அமைச்சர்களின் ஊழல்களை நீதிமன்றத்தில் தோலுரித்துக் காட்டுவேன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 14, 2020

என் மீது போடப்பட்ட வழக்கைப் பயன்படுத்தி ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் - அமைச்சர்களின் ஊழல்களை நீதிமன்றத்தில் தோலுரித்துக் காட்டுவேன்!

அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ள எடப்பாடிக்கு .இராசா எம்.பி. எச்சரிக்கை!

சென்னை, டிச. 14- "ஜெயலலிதா ஊழல் குறித்த உச்சநீதிமன்ற கண்டனங்களை நீதிமன்றத்தின் மூலம் நிரூபணம் செய்ய ஏதுவாக என் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ள முதலமைச்சர் எடப் பாடி பழனிச் சாமிக்கும், தமிழக காவல் துறைக்கும் நன்றி தெரிவித் துக் கொள் கிறேன்எனவும், “இந்த வழக்கைப் பயன் படுத்தி ஜெயலலிதா மற்றும் முதலமைச் சர் எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர் களின் ஊழல்களை நீதிமன்றத்தில் தோலுரித்துக் காட்டுவேன்எனவும் கழக துணைப் பொதுச்செயலாளர் . இராசா, எம்.பி. விடுத்துள்ள அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து . இராசா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அண்மையில் 2ஜி வழக்கு குறித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழ னிச்சாமி அவர்கள் ஆதாரமற்ற தான் தோன்றித்தனமான அவதூறுகளை என்மீது சுமத்தியதை தொடர்ந்து முத லமைச்சராக இருந்த ஜெயலலிதாதான் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன் றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்றும், அவர் ஊழல் செய்து அடித்த கொள்ளை அரசியல் சட்டத்தின் மீது அவர் எடுத்துக் கொண்ட உறுதி மொழியை சிதைத்தது மட்டுமன்றி, ஜனநாயக அரசியலுக்கு அடிப்படையாக விளங்கும் அரசியல் சட்டத்தையே படுகொலை செய்த செயலாகும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி ஆதாரத்தோடு நான் பேசியதை, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 153 மற்றும் 505இன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் தமிழக காவல்துறை என்மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் தெரிவித்த கடுமையான கண்டனங்கள் குறித்து நான் முதல்வருக்கு எழுதிய திறந்த மட லில் உள்ள எந்தக் கருத்தையும், வார்த் தையையும் பொய் என்றோ, புனைவு என்றோ மெய்ப்பிக்கவக்கற்ற முதலமைச் சர், தமிழக காவல்துறைமூலம் கோழைத் தனமாக இவ்வழக்கை என்மீது தொடுத் துள்ளார். தமிழக காவல்துறை தொடர்ந் துள்ள இவ்வழக்கின்மீது குற்றப் பத்தி ரிக்கை தாக்கல் செய்யப்படுமேயானால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய கண்டனக் கருத் துக்களை விசாரணை நீதிமன்றத்திலேயே உண்மை என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்ற அந்த அடிப்படையில் இவ்வழக்கை வர வேற்று, முதலமைச்சருக்கும், தமிழக காவல்துறைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தகைய வழக்குகள் மூலம் என்னை அச்சுறுத்தலாம் என்றோ, என் சட்டப் படியான வாதங்களைத் தடுக்கலாம் என்றோ , முதலமைச்சர் நினைத்தால் அதைவிட அரசியல் அறியாமை ஏதும் இருக்க முடியாது.

என்மீது போடப்படும் வழக்கைப் பயன்படுத்தியே ஜெயலலிதா செய்த ஊழலையும், ஜெயலலிதாவைப் பின் தொடர்ந்து அவரைப் போலவே ஊழ லில் திளைக்கும் முதலமைச்சரையும், இந்த அரசையும் தோலுரித்துக் காட்டு வதோடு விரைவில் அமையவிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், இப்போது ஊழலில் திளைக்கும் முதல மைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனை வரும் சட்டத்தின் முன் நிறுத் தப்பட்டுத் தண்டிக்கப்படும் காலம் வெகுதொலை வில் இல்லை என்பதையும் பணி வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு .இராசா எம்.பி. விடுத் துள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment