கழகத் தலைவர் இரங்கல்
ஆடிட்டர் அர.இராமச்சந்திரன் & முரளி அலுவலகத்தில் தணிக்கை மேலாளராக பணியாற்றிய எஸ்.ஞானசேகர் (வயது 51) நேற்று (16.12.2020) திடீர் மாரடைப்பு காரண மாக மறைவுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.
பெரியார் கல்வி நிறுவனங்கள், பெரியார் திடலில் இயங்கிவரும் நிறு வனங்களில் தணிக்கைக்காக ஆடிட்டர் இராமச்சந்திரன் சார்பாக வருகைபுரிந்து கடந்த 20 ஆண்டுகளாக தணிக்கை பணிகளை மேற்கொண்டவர் ஆவார். அவருக்கு சகோதரர், சகோதரி உள்ளனர்.
எதிர்பாரா மரணத்தால் ஆறாத் துயரத்தில் மூழ்கி இருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும், உடன் பணி யாற்றிய தோழர்களுக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
17.12.2020
No comments:
Post a Comment