‘உலக வழக்கழிந்த’ சமஸ்கிருத மொழியைத் திணிப்பது பகிரங்கமான பண்பாட்டுத்திணிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 30, 2020

‘உலக வழக்கழிந்த’ சமஸ்கிருத மொழியைத் திணிப்பது பகிரங்கமான பண்பாட்டுத்திணிப்பு

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடுங்கண்டனம்



சென்னை, நவ. 30- அரசு தொலைக் காட்சியில் செய்தி ஒளிபரப்பில் சமஸ்கிருத மொழியைத் திணிப்பது பகிரங்கமான பண்பாட்டுத் திணிப்பு என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடுங்கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் 29.11.2020 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,


அரசமைப்புச் சட்டத்தின் எட் டாவது அட்டவணையில் உள்ள செம்மொழியாம் தமிழ் உள்ளிட்ட  22 மொழிகளுக்கும் சமமான தகு தியையும், ஏற்றத்தாழ்வற்ற வளர்ச் சியையும் அளித்து, பன்முகத் தன்மை கொண்ட நாட்டின் ஒரு மைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பில் உள்ளது இந்திய ஒன்றிய அரசு. அதற்கு மாறாக, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சிப் பொறுப் புக்கு வந்த நாளிலிருந்தே இந்தி - சமஸ்கிருதத் திணிப்பை மட்டுமே மேற்கொண்டு, மற்ற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தி, ஒருமைப் பாட்டைக் குலைக்கும் நடவடிக் கைகளை அனைத்து மட்டத்திலும் மேற்கொண்டு வருகிறது.


மொழி ஆதிக்கத்தின் ஒளி-ஒலி வடிவமாகும்


தற்போது, நாள்தோறும் சமஸ்கிருத செய்தித் தொகுப்பைத் தமிழின் பொதிகைத் தொலைக் காட்சியிலும், பிற மாநில மொழித் தொலைக்காட்சிகளிலும் ஒளி பரப்ப வேண்டும் என்று மண்டலத் தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிலைய அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டிருப்பது, மொழி ஆதிக் கத்தின் ஒளி - ஒலி வடிவமாகும். அதுபோலவே, வாரந்தோறும் ஒரு சமஸ்கிருதச் செய்தித் தொகுப் பையும் மாநில மொழித் தொலைக் காட்சிகள் ஒளிபரப்ப, மத்திய அர சின் பிரசார்பாரதி நிறுவனத்தின் கீழ் செயல்படும் தூர்தர்ஷன் தலைமை அலுவலகத்திலிருந்து அனைத்து மண்டலத் தொலைக் காட்சி நிலைய அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நாளும் காலை 7.15 மணி முதல் 7.30 மணி வரை டில்லி தூர்தர்ஷன் ஒளிபரப்பும் 15 நிமிட சமஸ்கிருதச் செய்தி அறிக்கையை அதே நேரத்திலோ, அல்லது அடுத்த அரை மணி நேரத்திலோ மாநில மொழி அலைவரிசைகளி லும் ஒளிபரப்ப வேண்டும் என்கி றது இந்தச் சுற்றறிக்கை. மேலும், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாலை 6.00 மணிக்கு ஒளிபரப்பா கும் வாராந்திரச் செய்தித் தொகுப் பையும் மாநில மொழித் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் என இந்தச் சுற்றறிக்கை வலியுறுத் துகிறது.


திட்டமிட்டுத் திணிப்பது


தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளுக்கான தூர்தர்ஷன் அலைவரிசையில் அந்தந்த மாநிலச் செய்திகள் அம்மாநில மக்களின் தாய்மொழியில் ஒளிபரப்பாகின் றன. தேசிய அளவிலான செய்திகள் ஆங்கிலத்தில் விரிவாக ஒளிபரப்பா கின்றன. இந்நிலையில், இந்தியா வில் 15 ஆயிரம் பேர் அளவிற்கே பேசப்படும் - ‘உலக வழக்கழிந்த’ சமஸ்கிருத மொழியிலான செய்தி அறிக்கையை 8  கோடிக்கும் அதிக மான தமிழ் பேசும் மக்களிடமும், அதுபோலவே பல கோடி அள விலான இந்தியாவின் பிற மொழி பேசும் மக்களிடமும் திட்டமிட்டுத் திணிப்பது, அவரவர் தாய்மொழி மீது - மொழி சார்ந்த தேசிய இனத் தின் மீது, தகவல் தொழில்நுட்பத் தின் வாயிலாக மேற்கொள்ளப் படுகின்ற பகிரங்கப் பண்பாட்டுப் படையெடுப்பாகும்.


பிற்போக்கான செயல்பாட்டை நிறுத்திட வேண்டும்


பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாடு எனும் ஆலமரத்தை, இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு எனும் கோடரி கொண்டு பிளக்கும் பிற்போக்கான செயல் பாட்டை இனியாவது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உடனடியாக நிறுத்திட வேண்டும்.


செய்தி அறிக்கைகளிலும் பிற நிகழ்ச்சிகளிலும் இந்தி மொழித் திணிக்கப்பட்டபோது, தொலைக் காட்சிப் பெட்டிகளை உடைத்து எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திய இயக்கம் தி.மு.கழகம். சமஸ்கிருதத் திணிப்பைத் திரும்பப் பெறாவிட் டால் உடையப்போவது தொலைக் காட்சிப் பெட்டிகள் அல்ல; தாய் மொழியை உயிரெனக் கருதும் மக்களின் பங்கேற்புடன், மத்தியில் ஆட்சி செய்வோரின் ஆணவப் போக்கும் - அதிகார மமதையும்தான் என தி.மு.கழகம் எச்சரிக்கிறது.


No comments:

Post a Comment